Skip to main content

மகனை திட்டியதால் நேர்ந்த சோகம்.. தந்தையும் தற்கொலை

Published on 06/10/2022 | Edited on 06/10/2022

 

Tragedy caused by scolding son..


சென்னை அடுத்த குன்றத்தூர் அருகே அதிக நேரம் செல்போனில் விளையாடியதை தந்தை கண்டித்ததால் மனமுடைந்த பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தான் திட்டியதால் மகன் உயிரிழந்தாக நினைத்து துக்கத்தில் தந்தையும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குன்றத்தூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

 

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரை அடுத்த பழந்தண்டலம் பகுதியை சேர்ந்தவர் சுந்தர். இவருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். ஒரு மகன் தனியார் பள்ளியில் பத்தாம் படித்து வருகிறார். இந்நிலையில் மகன் அதிக நேரம் செல்போனை உபயோகித்ததால் தந்தை அவரை திட்டியதாக கூறப்படுகிறது.

 

தந்தை திட்டியதால் மனமுடைந்த மகன் அருகில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தான் திட்டியதால் தனது மகன் தற்கொலை செய்துகொண்டான் என்ற துக்கத்திலிருந்த தந்தை சுந்தரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் இருவரது உடலையும் மீட்டுக் குன்றத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக  அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சந்திரமுகி போல சூகுனா கதாபாத்திரமாக மாறிய இளைஞர்; ராணிப்பேட்டையில் பரபரப்பு

Published on 04/10/2023 | Edited on 04/10/2023

 

 A youth who became a Sukuna character like Chandramukhi; Bustle in Ranipet

 

செல்போன் கேம்களில் மூழ்கி, அதனால் மனம் சிதைந்த கல்லூரி மாணவன் ஒருவன் வெறி பிடித்ததை போல் நடந்து கொண்ட சம்பவம் ராணிப்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்துள்ளது காலிவாரி கண்டிகை. இப்பகுதியைச் சேர்ந்த 18 வயது கல்லூரி மாணவர் ஒருவர் சென்னையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு பொறியியல் படித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டிற்கு வந்த அந்த கல்லூரி மாணவர் தனி அறையில் புகுந்துகொண்டு செல்போனில் கேம் விளையாடுவதையும் அனிமேஷன் தொடர்களை பார்ப்பதையும்  வாடிக்கையாக கொண்டிருந்துள்ளார்.

 

நேற்று வரை நன்றாக இருந்த மாணவர் திடீரென செல்போன் கேமை அதிகமாக விளையாடியதால் வெறிபிடித்த நபர் போல் மாறியுள்ளார். வீட்டில் உள்ளவர்களையும் அவதூறாக பேசும் அளவிற்கு சென்றுள்ளார். 'ஏன் இப்படி பேசுகிறாய்' என கேட்க வருபவர்களை தாக்கவும் முயன்றுள்ளார். இதனால் மிரண்டுபோன இளைஞரின் தாய் அவரது கைகளை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கட்டி அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார். மருத்துவமனையில் இருப்பவர்களையும் மிரட்டும் தொனியில் பேசியதால் உடனடியாக மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர். அதன்படி அவர் கை, கால்கள் கட்டப்பட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். மேலும் இது தொடர்பான விசாரணையில் அந்த மாணவர் ஜப்பான் அனிமேஷன் தொடர்களில் வரும் சூகுனா என்ற கதாபாத்திரம் மீது கொண்ட ஈர்ப்பால் அந்த கதாபாத்திரம் போலவே மாறிவிட்டதாகக் கூறப்படுகிறது.

 

 

 

Next Story

ஹோட்டல் தொழிலாளியை தாக்கி செல்போன் பறித்த 6 பேர் கைது

Published on 30/05/2023 | Edited on 30/05/2023

 

6 people were arrested for attacking the hotel worker and snatching his cell phone

 

மேற்குவங்க மாநிலம் மீனிபூர் நகரைச் சேர்ந்தவர் ரஹிம்ஷா (36). இவர் ஈரோடு சத்தி ரோடு ஞானபுரம் மாரியம்மன் கோவில் பஸ் நிறுத்தம் அருகில் உள்ள ஒரு ஹோட்டலில் வேலை பார்த்து வருகிறார். ரஹிம்ஷா தனது நண்பருடன் சம்பவத்தன்று பஸ்சுக்காக காத்துக் கொண்டிருந்தார். அப்போது பேருந்து நிறுத்தத்தில் 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று மது அருந்திக் கொண்டிருந்தது.

 

இந்த நிலையில் ரஹிம்ஷா தனது பாக்கெட்டில் இருந்து கர்ச்சீப்பை எடுத்தபோது பாக்கெட்டில் இருந்த அவரது செல்போன் கீழே விழுந்துள்ளது. அப்போது அங்கு மது அருந்திக் கொண்டிருந்த கும்பலைச் சேர்ந்த ஒருவர் ரஹிம்ஷாவின் செல்போன் எடுத்துக் கொண்டாராம். அது குறித்து ரஹிம்ஷா அவரிடம் கேட்டபோது அவர்கள் 6 பேரும் சேர்ந்து ரஹிம்ஷாவை தாக்கியுள்ளது. அதைக் கண்ட அருகில் இருந்த ஹோட்டல் உரிமையாளர் மற்றும் அப்பகுதியினர் அவர்களைத் தடுக்க வந்தவுடன் ரஹிம்ஷாவின் செல்போனை எடுத்துக்கொண்டு அந்த கும்பல் தப்பி ஓடிவிட்டது.

 

இது குறித்து ரஹிம்ஷா ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் தெரிவித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், ரஹிம்ஷாவை தாக்கி செல்போன் பறித்துச் சென்ற எல்லப்பாளையம், ஆயப்பாளியை சேர்ந்த சந்தோஷ் (26), கிருஷ்ணமூர்த்தி (24), ஈரோடு காளை மாட்டு சிலை, தீயணைப்பு நிலையம் பகுதியை சேர்ந்த அஜித்குமார் (24), பாரத் (20), குணசேகரன் (25), சென்னிமலை ரோடு பகுதியைச் சேர்ந்த ஜெகதீஷ் (27) ஆகிய 6 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.