கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடுமுழுவதும் மே 03 வரை ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் இந்நிலையில் சென்னை, கோவை, சேலம், திருப்பூர், மதுரை ஆகிய மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு தமிழக அரசின் உத்தரவு படி நேற்றிலிருந்து (26.04.2020) அமலுக்கு வந்தது. எனினும், பொதுமக்கள் முறையான காரணங்கள் இன்றி வெளியே வருவதை தடுப்பதற்காக காவல்துறையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்றைய தினம் சென்னையில் பல்வேறு முக்கிய சாலைகளில் அத்தியாவசியமின்றி வெளியே வந்தவர்களை தடுத்து நிறுத்தி காவல்துறை வழக்குப்பதிவு செய்தனர்.