Skip to main content

போக்குவரத்து அலுவலர்கள் தீவிர வாகன தணிக்கை; ரூ.12 லட்சம் அபராதம் வசூல்!

Published on 16/09/2018 | Edited on 16/09/2018
police

 

தமிழகம் முழுவதும், போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கடந்த நான்கு நாள்களாக முக்கிய சுங்கச்சாவடிகளில் தீவிர வாகன  தணிக்கையில் ஈடுபட்டுள்¢ளனர்.


தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில், போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தீவிர வாகனத் தணிக்கை நடத்த  உத்தரவிடப்பட்டு உள்ளனர். தொடர் விடுமுறை என்பதால், சாலை விபத்துகளை கட்டுப்படுத்தும் நோக்கில் தீவிர வாகனத்  தணிக்கைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளதாக தகவல்கள் கூறப்படுகின்றன.


அதன்படி செப். 12ம் தேதி மாலை 6 மணி முதல் நாளை (17ம் தேதி) காலை 6 மணி வரை 24 மணி நேர வாகனத் தணி க்கை நடந்து வருகிறது. இதையடுத்து, சேலம் சரக துணை போக்குவரத்து ஆணையர் சத்தியநாராயணன் மேற்பார்வையில்  வட்டார போக்குவரத்து அலுவலர்கள், வாகன ஆய்வாளர்கள் சேலம் மாவட்டம் மேட்டுப்பட்டி, தொப்பூர் ஆகிய சுங்கச்ச £வடிகளில் 24 மணி நேரம் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

 

police


இதற்கென வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தலைமையில் தனிப்படையும் அமைக்கப்பட்டு உள்ளது. சிறப்பு வாகனத்  தணிக்கையில் இதுவரை 2262 வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு உள்ளன. அவற்றில், 644 வாகனங்களுக்கு சோதனை  அறிக்கை வழங்கப்பட்டு உள்ளது.


குறிப்பாக சேலம், தர்மபுரி மாவட்டங்கள் வழியாக இயக்கப்படும் அனைத்து ஆம்னி பேருந்துகளும் சோதனை செய்யப்பட்டன.  அவற்றில் 482 ஆம்னி பேருந்துகள் பயணிகள் சாராத சரக்குகளை ஏற்றிச்சென்றது தெரிய வந்தது. மேலும், கண்கூசும்  முகப்பு விளக்குகளை பயன்படுத்தியது, அவசர வழி கதவு செயல்படாதது, காற்று ஒலிப்பான் பயன்படுத்தியது, சாலைவரி  செலுத்தாமல் இயக்கியது, முறையான ஆவணங்கள் இல்லாதது உள்ளிட்ட குறைபாடுகளுக்கு சோதனை அறிக்கை  வழங்கப்பட்டது.


மேலும் அதிக பாரம் ஏற்றியது, வரி செலுத்தாமல் இயக்கியது மற்றும் பல்வேறு குறைபாடுகளுடன் இயக்கப்பட்ட 162 சரக்கு  மற்றும் இதர வாகனங்களுக்கும் சோதனை அறிக்கை அளிக்கப்பட்டது.


இந்த சிறப்பு வாகனத் தணிக்கையின் மூலம் 644 சோதனை அறிக்கை வழங்கப்பட்டு உள்ளதோடு, ரூ.12 லட்சத்து 41600  அபராதமும் (இணக்கக் கட்டணம்) வசூலிக்கப்பட்டது. சாலை வரியாக ரூ.89775 வசூலிக்கப்பட்டது. மேலும், ரூ.3 லட்சத்து  26200 அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. வரி செலுத்தாமல் இயக்கப்பட்ட புதுச்சேரி ஆம்னி பேருந்து ஒன்று சிறைபிடிக்கப்பட்டது.

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.