Advertisment

சென்னையில் பல்வேறு இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல்!

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது தாழ்வு மண்டலமாக மாறி வலுப்பெற்றுள்ளது. இந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறி நவம்பர் 25- ஆம் தேதி, அதி தீவிரப் புயலாகக் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எங்கே கரையைக் கடக்கும் என்று உறுதியாகத் தெரியாத நிலையில், கடலோர மாவட்டங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisment

சென்னையில் மதியம் முதலே காற்றுடன் மழை பெய்துவருகிறது. கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் சென்னை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மாலை முதல் சென்னையில் சூறைக் காற்றுடன், சில இடங்களில் பலத்த மழை பெய்துவருகிறது. இதனால், எழும்பூர், வேப்பேரி, பூவிருந்தவல்லி, நுங்கம்பாக்கம், கீழ்ப்பாக்கத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. விமான நிலையத்தில் இருந்து கிண்டி நோக்கிச் செல்லும் சாலையிலும்கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால்,வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.

Advertisment

rain
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe