Skip to main content

சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்

Published on 05/08/2023 | Edited on 05/08/2023

 

Traffic change in Chennai tomorrow!
 கோப்புப்படம்

 

திமுகவின் முன்னாள் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞரின் நூற்றாண்டு விழா கடந்த ஜூன் மாதம் 3 ஆம் தேதி முதல் தமிழக அரசு சார்பிலும் திமுக சார்பிலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இது தொடர்பாகப் பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

 

அந்த வகையில் கலைஞரின் நூற்றாண்டு விழாவையொட்டி, சென்னையில் நாளை (06.08.2023) காலை 04.00 மணி முதல் 11.00 மணி வரை, கின்னஸ் உலக சாதனை படைக்கும் வகையில் 1063 திருநங்கைகள் உட்பட 75,000 பேர் பங்கேற்கும் 'கலைஞர் நூற்றாண்டு மாரத்தான் - 2023' என்ற மாரத்தான் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் கலந்துகொண்டு பங்கேற்று வெற்றி பெறுவோருக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் 9 பிரிவுகளின் கீழ் 10.70 இலட்சம் மதிப்பிலான பரிசுகளை வழங்க உள்ளார். மேலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த போட்டியில் பங்கேற்கும் திருநங்கைகளுக்கு ஊக்கப்பரிசு வழங்க உள்ளார்.

 

இந்நிலையில் கலைஞர் நூற்றாண்டு நினைவு மாரத்தான் போட்டியை ஒட்டி சென்னையில் சில இடங்களில் நாளை காலை 03.00 மணி முதல் 11.00 மணி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ராஜாஜி சாலையில் இருந்து வரும் வாகனங்கள் ரிசர்வ் வங்கி சுரங்கப் பாதை வழியாகச் செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது.  அவ்வாறு வரும் வாகனங்கள் பாரீஸ் கார்னர், என்.எப்.எஸ். சாலை, முத்துச்சாமி பாலம், வாலாஜா பாயிண்டிலிருந்து வலது புறம் திரும்பி அண்ணாசாலையில் வெல்லிங்டன் பாயிண்ட் வழியாகச் செல்ல வேண்டும்.

 

வாலாஜா பாயிண்டில் இருந்து அண்ணாசிலை சந்திப்பு வரை உள்ள வலதுபுற சாலை இருவழிப் பாதையாகச் செயல்படும். வாகனங்கள் அண்ணாசிலையில் இருந்து வாலாஜா சாலை செல்ல அனுமதி இல்லை. அவ்வாகனங்கள் பெரியார் சிலை மற்றும் பாட்டா சந்திப்பு வழியாகச் செல்ல வேண்டும். வாகனங்கள் பாரதி சாலை, டாக்டர் பெசன்ட் சாலை மற்றும் லாய்ட்ஸ் சாலையிலிருந்து காமராஜர் சாலை செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது. அவ்வாகனங்கள் ஐஸ் அவுஸ் சந்திப்பு மற்றும் ரத்னா கஃபேயிலிருந்து திருப்பி விடப்பட்டு டாக்டா நடேசன் சாலை செல்ல அனுமதிக்கப்படும். சாந்தோம் நெடுஞ்சாலையில் இருந்து வரும் வாகனங்கள் சாந்தோம் நெடுஞ்சாலை x காரணீஸ்வரர் பக்கோடா தெரு சந்திப்பில் திருப்பப்பட்டு காரணீஸ்வரர் பக்கோடா தெரு வழியாக டாக்டர். நடேசன் சாலை, டாக்டர். ராதாகிருஷணன் சாலை வழியாகச் செல்ல வேண்டும். 

 

மியூசிக் அகாடமியிலிருந்து காந்தி சிலை நோக்கி வரும் வாகனங்கள் வி.எம். சாலை சந்திப்பில் திருப்பப்பட்டு வி.எம்.சாலை வழியாக ராயப்பேட்டை நெடுஞ்சாலை, லஸ் கார்னர், ராமகிருஷ்ண மடம் சாலை வழியாகச் செல்ல வேண்டும். அண்ணாசாலையில் வரும் கனரக வாகனங்கள் ஸ்பென்சர் சந்திப்பிலிருந்து அண்ணாசிலை செல்ல அனுமதி இல்லை. ஸ்பென்சர் சந்திப்பிலிருந்து பின்னி சாலை மற்றும் மார்ஷல் ரோடு வழியாகச் செல்ல வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமரின் வெறுப்பு பிரச்சாரத்திற்கு எதிராக எஸ்.டி.பி.ஐ போராட்டம்! (படங்கள்)

Published on 27/04/2024 | Edited on 27/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், மோடியின் மதவெறுப்பு பிரச்சாரத்தை கண்டித்து, எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள இந்தியன் வங்கி அருகே பேரணியாக நடந்து சென்று  தேர்தல் ஆணையம் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினர். அப்போது எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட  போராட்டக்காரர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர்.

Next Story

ஒரே நாளில் குவிந்த கூட்டம்; உதகையில் போக்குவரத்து நெரிசல்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Crowds gathered in one day; Traffic jam in the ooty

கோடை காலம் தொடங்கி வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. நீர்ச்சத்து குறைபாட்டை தடுப்பதற்காக ஒவ்வொரு சுகாதார நிலையங்களிலும் ஓ.ஆர்.எஸ் கரைசல்களை ஆயத்தமாக வைத்திருக்கும் படி தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் கோடை காலம் தொடங்கி பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் பலரும் சுற்றுலாத் தளங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் மலைப் பிரதேசமான உதகைக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வரத் தொடங்கியுள்ளனர்.கடந்த இரண்டு நாட்களாகவே சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்த நிலையில், தற்போது இன்று அதிகப்படியான சுற்றுலாப் பயணிகள் உதகையில் குவிந்துள்ளனர். இதனால் உதகையில் நகர்ப் பகுதியில் சுற்றுலா வாகனங்கள் அணிவகுத்ததால் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

பல்வேறு இடங்களில் ஒரு வழிச்சாலையாக நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சாலைகள் மாற்றப்பட்டாலும் போக்குவரத்து நெரிசல் என்பது அதிகரித்து வருகிறது. உதகை தாவரவியல் பூங்கா சாலை, தொட்டபெட்டா சாலை, கூடலூர் சாலை, பேருந்து நிலையம் செல்வதற்கான சாலை என அனைத்து சாலைகளிலும் சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும் சுற்றுலா பயணிகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.