Advertisment

சிறுவன் ஓட்டிய டிராக்டர் ஹோட்டலுக்குள் புகுந்து விபத்து... ஒருவர் உயிரிழப்பு!

incident in salem

Advertisment

சிறுவன் ஓட்டிய டிராக்டர் ஹோட்டலுக்குள் புகுந்ததில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் ஆத்தூரில் முல்லிவாடி பகுதியை நோக்கி 16 வயது சிறுவன் ஒருவன் ராஜா என்பவருக்குச் சொந்தமான டிராக்டரை இயக்கியதாகக் கூறப்படுகிறது. அப்பொழுது எதிர்பாராத விதமாக சரவணா டிபன் சென்டர் என்ற ஹோட்டல் ஒன்றினுள் டிராக்டர் புகுந்து விபத்துக்குள்ளானது.

இதில் கறி வியாபாரி ஆறுமுகம் என்பவர்மீது மோதிய டிராக்டர், ஹோட்டலில் இருந்த பரோட்டா கல் மீது மோதி அங்கு வேலை செய்துகொண்டிருந்த பரோட்டா மாஸ்டர் மீதும், வாடிக்கையாளர் ஒருவர் மீதும் மோதியது. இதில் மூன்று பேரும் படுகாயமடைந்த நிலையில் மூவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். ஆனால் இறுதியில் கறி வியாபாரி ஆறுமுகம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

incidnet Salem tractor
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe