Skip to main content

குடிசைகளை நோக்கி சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள்!

Published on 29/04/2020 | Edited on 29/04/2020


 

Towards huts - Chidambaram Natarajar Temple Priests


உலக நாடுகளை, கடந்த இரு மாதங்களுக்கு மேலாக கரோனா தோற்று நோய் அச்சுறுத்தி வருகிறது. இதனால் பல பேர் உயிரிழந்துள்ளனர்.  இதனால் உலக நாடுகளிலுள்ள மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் அவதி அடைந்து வருகிறார்கள்.  இந்த நிலையில் தினந்தோறும் கூலி வேலை செய்யும் பொதுமக்கள் கூலித் தொழிலாளர்கள் சிறு தொழில் செய்பவர்கள் என அனைத்து தரப்பினரும் உணவுக்கு அவதியடைந்து வருகின்றனர்.


இந்த நிலையில் உலக புகழ்பெற்ற  தமிழகத்தின் முக்கிய கோயில்களில் ஒன்றாக விளங்கும் நடராஜர் கோவில் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ளது. இந்த கோவிலில் ஊரடங்கு துவக்கத்தில் இருந்து பொதுமக்கள் யாரையும் அனுமதிக்கவில்லை. இந்த நிலையில் கோவிலின் உள்ளே தினந்தோறும் அபிஷேகம் உள்ளிட்ட தீபாரதனைகள் நடந்து வருகிறது.

அப்போது  நடராஜருக்கு படைக்கப்படும் பிரசாதங்கள் சிதம்பரம் நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள சி. கொத்தங்குடி, வக்கராமாரி, கவரப்பட்டு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு சென்று ஒரு நாளைக்கு 300 குடும்பங்கள் சாப்பிடும் அளவிற்கு பிரசாதங்களை கடந்த மார்ச் மாத ஊரடங்கு நேரத்திலிருந்து இன்றுவரை வழங்கி வருகிறார்கள்.

இதனால் ஏழை எளிய மக்கள் அவர்கள் கொடுக்கும் பிரசாதத்தை அவர்களின் வீட்டில் உள்ள பாத்திரத்தை எடுத்து வந்து மதியம் மற்றும் இரவுக்கும் சேர்த்து வாங்கிக் கொள்கிறார்கள். இதனால் ஏழை மக்களுக்கு இருவேளை உணவு எந்த கஷ்டமும் இல்லாமல் கிடைக்கிறது.  இதற்கு நடராஜர் கோயில் தீட்சிதர்களுக்கு குடிசை பகுதி மக்கள் நன்றி தெரிவித்து வருகிறார்கள்.  மேலும் இதனை அறிந்த மற்ற கிராம பகுதிகளில் வசிக்கும் ஏழை மக்கள் எங்கள் பகுதிக்கும் வந்து நடராஜர் கோவில் பிரசாதங்களை வழங்குங்கள் என்று தினந்தோறும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

இந்தநிலையில் தீட்சிதர்கள் முன் அனுமதி பெற்ற வகையில், அந்தப் பகுதியில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை ஆய்வு செய்து அவர்களுக்கு சம்பந்தப்பட்ட இடத்திற்கே சென்று சிதம்பரம் நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள் சார்பில் பாஸ்கர தீட்சிதர் மற்றும் கோவில் தீட்சிதர்கள் பிரசாதங்களை வழங்கி வருகிறார்கள். இது அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் சிதம்பரம் நடராஜர் கோயிலில் இருந்து கரோனா தொற்றுக்கு கடுமையாக பணியாற்றும் காவல்துறையினர், நகராட்சி உள்ளிட்ட அனைத்து தரப்பினரக்கும் சுடசுட உணவுகளை வழங்கி வருகிறார்கள்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பசி என்கிற தேசிய நோய்’ - டாக்கு டிராமா விமர்சனம்

Published on 13/04/2024 | Edited on 15/04/2024
Lockdown docu drama review

வரலாற்று ஆவணப்பட நாடகம் என்கிற விளக்கத்தோடு யூடியூப்பில் ‘பசி என்கிற தேசிய நோய்’ லாக்டவுன் டாக்கு டிராமா வெளி வந்திருக்கிறது. சக்திவேல் தங்கமணி இயக்கியிருக்கிறார். கொரோனா கால ஊரடங்கு சமயத்தில் ஏற்பட்ட மனித மன முரண்கள் பலவற்றை வசனங்கள் வழியாகவும், அதில் காட்சி அமைப்புகளை ஆங்காங்கே கோர்வையாகவும் கோர்த்து தந்திருக்கிறார்கள்.

ஊரடங்கு சமயத்தில் ஒரு வாடகை அறையில் தங்கியிருக்கும் இந்துத்துவா மனநிலையிலுள்ள சினிமாவில் துணை நடிகராக இருக்கும் நண்பனுக்கும், அதே அறையில் தங்கியிருக்கும் சமூகநீதி அரசியல் பேசும் ஊடகத்துறை நண்பனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் தான் படத்தின் முக்கியமான பாகமாக இருக்கிறது. அத்தோடு ஊடகத்துறை நண்பன் ஊரடங்கு சமயத்தில் சென்னையில் உள்ள பல இடங்களுக்கு பயணப்பட்டு ஊரடங்கால் அவதிப்படுகிற பல்வேறு மக்களுடைய குரல்களை கருத்து கணிப்பின் வழியாக பதிவு செய்கிறார். பல்வேறு அரசியல் நிலைப்பாடு, வர்க்க முரண்கள், சாதிய சிக்கல்கள், அடிப்படை வாழ்வாதார பின்னணியில் உள்ள மக்கள் எனப் பலரும் தங்களுடைய கருத்துக்களைச் சொல்கிறார்கள். இவை அனைத்தும் ஊடக நண்பனால் ஆவணப்படுத்தப்படுகிறது.

அறையில் தங்கியிருக்கும் சுயநலமான நண்பனோ தன்னுடைய உணவிற்கும், வாழ்வாதாரத்திற்கும் மட்டுமே முக்கியத்துவம் தருகிறவனாகவும், அவனை கேள்விக்கு உள்ளாக்குகிறவர்களை தேசதுரோகி, ஆண்டி இண்டியன் என்று சர்வ சாதாரணமாக முத்திரை குத்தி பதிலளிக்காமல் திரும்புகிறவனாக இருக்கிறான்.

ஒரு மணி நேரம் 12 நிமிடம் ஓடுகிற படத்தில், காட்சி அமைப்புகளின் வழியே விசயங்களை நகர்த்துவது குறைந்து முழுக்க முழுக்க வசனங்களாலேயே படத்தினை நகர்த்துகிறார்கள். இதற்கு ஏன் ஆவணப்படம் வேண்டும், விசுவலாக ஏன் இருக்க வேண்டும், ஆடியோ  மட்டுமே இருந்து விட்டால் போதுமானதாக இருக்குமல்லவா?. ஆவணப்படுத்துகிற விசயத்தையும் நமது இடது சாரி சிந்தனைகளையும் சுவாரசியமாக காட்சி மொழியாக எளிய மக்களுக்கு கொடுக்க வேண்டும் தானே தவிர, பிரச்சார நெடியாகவே படம் முழுவதும் இருப்பது அயற்சியைத் தருகிறது. அது ஒரு சிந்தனையாளனை மெருகேற்றிக் கொள்ள பயன்படுமே தவிர, மற்ற அனைத்து தரப்பு பார்வையாளனை எப்படி சென்று சேரும் என்பது கேள்விக்குறியாக நிற்கிறது.

படத்தினை பின்னணி இசையும், ஒளிப்பதிவும் தாங்கிப் பிடிக்கிறது. அதுவே தொழில்நுட்ப ரீதியாக இந்தப் படத்தை பார்க்கவும் வைக்கிறது. சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்று டாக்டர் அம்பேத்கர் சொன்னதாக படம் தொடங்கும் முன் வருகிறது. அது டாக்டர் அம்பேத்கர் சொல்லவில்லை. கவிஞர் பழனிபாரதியின் கவிதை என்பதை படக்குழுவினருக்கு தெரியப்படுத்த வேண்டியிருக்கிறது.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்கெடுத்த போராளிகள் சிறையில் இருக்கிறார்கள் என்றும் இன்னும் ஏழு பேர் விடுதலை ஆகவில்லை என்றும் படத்தில் வசனம் வருகிறது. ஒருவேளை இந்த ஆவணப்படம் 2020-க்கு பிறகு அப்டேட் செய்யப்படவில்லை போல, ஏனெனில் ஏழுபேரும் விடுதலை ஆகிவிட்டார்கள். அதில் ஒருவர் இலங்கை செல்ல வேண்டிய நிலையில் இறந்தும் போய்விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியாய் சமூகநீதி நண்பன் பேச்சைக் கேட்டு இந்துத்துவா மனநிலை நண்பன் திருந்துவதாக காட்டப்படுகிறது. பலர் இப்படி திருந்தினால் நல்லது தான் என்று பார்வையாளர்களுக்கு கூட ஆசைதான். ஆனால் மாற்றம் அவ்வளவு சாத்தியமாக தெரியவில்லை. அந்த அளவிற்கு சிலர் மூளைச்சலவை செய்யப்பட்டு சமதர்மமற்ற மனநிலையிலேயே இருக்கிறார்கள். பிரச்சார நெடி அதிகம் வீசுகிற இப்படத்தில் வசனங்கள் வழியாக கடத்த முயன்ற மன உணர்வுகளை காட்சி மொழிக்கு முக்கியத்துவம் தந்திருந்து கடத்தியிருந்தால் இன்னமும் சுவாரசியம் பெற்றிருக்கும். இப்படத்தின் முயற்சிக்கு, படக்குழுவிற்கு வாழ்த்துகள்! 

Next Story

சிதம்பரம் நடராஜர் கோயிலில் உழவாரப் பணிகள் குறித்து ஆய்வு

Published on 15/03/2024 | Edited on 15/03/2024
 study on tillage work at Chidambaram Natarajar temple

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கடலூர் மாவட்ட இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் பரணிதரன் தலைமையில் கோட்ட பொறியாளர் அசோகன் ஆலய நிலங்கள் தனி வட்டாட்சியர் செந்தில்வேலன், மண்டல ஸ்தபதி, கோயில்கள் ஆய்வாளர் உள்ளிட்டவர்கள் அடங்கிய கோயில் உழவாரப் பணிகள் குறித்த நிலையான ஆய்வுக் குழுவினர் கோயிலில் பல்வேறு இடங்களில் கோயில் எவ்வாறு பராமரிக்கப்படுகிறது. சுத்தமாக உள்ளதா? என்பது குறித்து நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆய்வுகளை மேற்கொண்டனர்.

இவர்கள் தெற்கு கோபுர வாயில், மேல கோபுர வாயில், கோயில் உட்பிரகாரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தனர். இது குறித்து இணை ஆணையர் பரணிதரன், கோயில்கள் எவ்வாறு பராமரிக்கப்படுகிறது என்பது குறித்து நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆய்வு செய்ததாகவும் இது குறித்த தகவலையும் நீதிமன்றத்தில் தெரிவிக்க உள்ளதாகவும் செய்தியாளர்களிடம் கூறினார்.

இதனைத் தொடர்ந்து கோவில்களில் வெளி பிரகாரங்களில் கழிவு நீர் வெளியேறி துர்நாற்றம் வீசுவதையும், தெற்கு வீதி, கீழ வீதி கோபுரம் அருகில் மாட்டு தொழுவம் அமைக்கப்பட்டுள்ளதால் அங்கு மாட்டு சாணிகள் மலைபோல் குவிக்கப்பட்டுள்ளது. இதனால் இவ்வழியாக வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் துர்நாற்றம் தாங்காமல் அவதிப்படுவதாக உழவார பணிகள் ஆய்வுக் குழுவினரிடம் தெரிவித்தனர். இந்த கருத்தை ஏற்றுக்கொண்டு நீதிமன்றத்தில் தெரிவிப்பதாக கூறினார்கள்.

முன்னதாக ஆய்வுக் குழுவினர் கோயிலுக்கு உள்ளே வரும்போது இது தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் உள்ள கோயில் இந்து அறநிலையத்துறைக்கும் கோயிலுக்கும் சம்பந்தம் இல்லை. இங்கு உழவார பணிகள் குறித்து ஆய்வு செய்வது கண்டிக்கத்தக்கது. இதற்கு ஆட்சேபனை தெரிவிக்கிறோம். இது உள்நோக்கம் கொண்டது என கோயில் தீட்சிதர்களின் செயலாளர் ஆய்வு குழுவினரிடம் கடிதம் அளித்துள்ளார். கோயிலில் உழவார பணிகள் குறித்து ஆய்வு செய்தது கோயிலில் பரபரப்பை ஏற்படுத்தியது.