Skip to main content

வாய்க்காலில் பாய்ந்த சுற்றுலாப் பேருந்து... 21 பேர் காயம்!

Published on 22/01/2021 | Edited on 22/01/2021

 

Tourist bus accidents into the canal ...

 

முசிறி அருகே பக்தர்கள் சென்ற பேருந்து வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துகுள்ளானது. இதில், 21 பேர் காயம் அடைந்தனர்.

 

திருச்சி மாவட்டம் முசிறி அருகே  மஞ்சகோரை என்ற இடத்தில் ஓசூரில் இருந்து திருநள்ளாறு சனீஸ்வர பகவான் தளத்திற்கு பக்தர்கள் சென்ற சுற்றுலாப் பேருந்து வாய்க்காலில் பாய்ந்து கவிழ்ந்தது. 

 

வாய்க்காலில் தண்ணீர் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. நேற்று இரவு சுமார் 2 மணி அளவில் ஓசூரில் இருந்து திருநள்ளாறு உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்களுக்குச் செல்வதற்காக 43 பக்தர்கள் சுற்றுலாப் பேருந்தில் பயணித்து வந்துள்ளனர்.

 

திருச்சி நாமக்கல் சாலையில் முசிறி அருகே மஞ்சகோரை என்ற இடத்தின் அருகே பேருந்து வந்தபோது, சாலையின் இடது புறம் இருந்த வாய்க்காலுக்குள் பேருந்து கவிழ்ந்தது. இதில் பேருந்தில் பயணித்த 21 பேரும் காயம் அடைந்தனர். அதில் 11 பேர் முசிறி அரசு மருத்துவமனைக்கும் 10 பேர் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். 

 

சம்பவம் குறித்து வாத்தலை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். பேருந்து கவிழ்ந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. முசிறி அரசு மருத்துவமனையில் ஜெயலட்சுமி, சந்திரன், ஜெகதீஷ் உள்ளிட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது தாக்குதல்; விசாரணையில் வெளியான பகீர் தகவல்! 

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Govt Bus Driver Conductor incident information released in the investigation

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பழைய பாலக்கரை பகுதியில் பந்தநல்லூரில் இருந்து கும்பகோணம் நோக்கி அரசு நகரப் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது 8 பேர் கொண்ட இளைஞர் கும்பல் ஒன்று இந்த பேருந்தை வழிமறித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுட்டனர். மேலும் ஆத்திரமடைந்த இளைஞர்கள் பேருந்துக்குள் சென்று ஓட்டுநரை தகாத வார்த்தைகளால் திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ஓட்டுநரை பேருந்துக்கு வெளியே இழுத்து வந்து அவரை சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். இதனை தடுக்க முயன்ற நடத்துநர் மீதும் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். அருகில் இருந்தவர்கள் இதனை தடுக்க முயன்ற போது இந்த இளைஞர்கள் அவர்களையும் தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்து தாக்கியுள்ளனர். அதே சமயம் அந்த வழியே வந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்கள் இருவர் இந்த சம்பவத்தை படம் எடுத்தபோது அவர்களையும் தகாத வார்த்தைகளால் பேசி தாக்க முயன்றுள்ளனர்.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மற்றும் இருவர் என 4 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். 6 பேர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் போலீசார் நடத்திய விசாரணையில் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட 8 பேரும் கஞ்சா போதையில் இருந்தனர் என்ற பகீர் தகவல் வெளியாகியுள்ளது.  இத்தகைய சூழலில் மேலும் 4 பேரை  போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

Next Story

சாலை விபத்து; பரிதாபமாகப் பிரிந்த உயிர்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Hotel worker passed away in road accident near Modakurichi

ஈரோடு, என்.ஜி.ஜி.ஓ. காலனியை சேர்ந்தவர் சரவணன் (48). திருமணமாகவில்லை. இவரது பெற்றோர் கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் இறந்துவிட்டனர். கரூர் ரோட்டில், சோலார் அருகே உள்ள ஓட்டல் ஒன்றில் சரவணன் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று முன் தினம் இரவு சரவணன், தான் வேலை பார்க்கும் ஓட்டலுக்கு சொந்தமான பைக்கை எடுத்துக் கொண்டு, கரூர் ரோட்டில் உள்ள பரிசல் துறை நால்ரோட்டில் இருந்து, கொக்கராயன் பேட்டை நோக்கி சென்றுள்ளார். அப்போது, காவிரி பாலத்துக்கு முன்பாக, எதிரில் வந்த ஸ்கூட்டர் எதிரிபாரதவிதமாக சரவணன் ஓட்டிச் சென்ற பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதையடுத்து, அங்கிருந்தவர்கள், சரவணனை மீட்டு, ஈரோடு அரசுத் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சரவணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து, மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்