Skip to main content

நீர்வழித்தடம்  ஆக்கிரமிப்பு; வாழ்வாதாரத்தை அழிப்பதாக விவசாயிகள் வேதனை!

Published on 29/09/2019 | Edited on 29/09/2019

செந்துறையில் இருந்து நல்லாம்பாளையம் செல்லும் வழியில் உள்ளது பாளையத்தார் ஏரி.

இந்த ஏரியில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகளை பார்வையிட்டு மரக்கன்றுகள் நடுவதற்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சரவணவேல்ராஜ் மற்றும் அரியலூர் மாவட்ட ஆட்சியர் வினய் ஆகியோர் வந்தனர். அப்போது அங்கு வந்த உதயசூரியன், செல்வகுமார், சாந்தி உள்ளிட்ட விவசாயிகள் இந்த பகுதியில் சிமெண்ட் ஆலை நிர்வாகம் எங்களை விவசாயம் செய்ய விடாமல் எங்களது பாதையை ஆக்கிரமிப்பு செய்து லாரிகளை இயங்குகிறார்கள்.

 

 torment to Farmers livelihoods


நீர்வரத்து வழியில் மண்ணை கொட்டி பாதை அமைத்து லாரிகளை இயக்கி எங்களை மிரட்டுகிறார்கள். மழைகாலத்தில் பெய்யும் தண்ணீர் தற்போது எங்களது விவசாய நிலங்கள் வழியாக செல்கிறது. அதனால் நாங்கள் விவசாயம் செய்ய முடியாமல் எங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்துக் கொண்டு இருக்கிறோம். எனவே உரிய நடவடிக்கை எடுத்து எங்களது வாழ்வாதாரத்தை காக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

அதன் பின்னர் மாவட்ட கண்காணிப்பாளர் சரவணவேல்ராஜ் அரியலூர் கலக்டர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்று தெரிவித்தார். அதனை தொடர்ந்து பேசிய அரியலூர் கலக்டர் வினய் தங்களது பிரச்சினை குறித்து திங்கள் கிழமை மனு கொடுங்கள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். பின்னர் அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர்

 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர். 

Next Story

'தண்ணிக்காக நாங்க எங்கே போவோம்'-காலி குடத்துடன் மக்கள் போராட்டம்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
'Where shall we go for water'-people protest with empty jugs

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியில் குடிநீர் வராததால் பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேப்பூர் ஒன்றியத்தில் உள்ள கீரனூர் கிராம மக்கள் இரண்டு வருடமாகவே தண்ணீர் வரவில்லை என குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். 'கடந்த ஆறு மாதமாக தண்ணீர் இல்லாமல் அவதிப்படுவதாகவும் தெரிவித்தனர். ஒரு குடும்பத்திற்கு இரண்டு குடம் தண்ணீர் மட்டும் தான் கிடைக்கிறது. எங்கள் ஊரில் மின்சார வசதி இல்லை, ரோடு வசதி இல்லை இது தொடர்பாக பஞ்சாயத்தில் உள்ளவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டேன் என்கிறார்கள். நாங்கள் என்ன செய்வது. தண்ணிக்காக நாங்கள் எங்கே போவோம்' என காலி  குடங்களுடன் சாலையில் நின்றபடி தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.