Skip to main content

சிலை கடத்தல் வழக்கில் நாளை தீர்ப்பு!!

Published on 29/11/2018 | Edited on 29/11/2018
Tomorrow verdict statue Smuggling case!!

 

சிலை கடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. சிலைகடத்தல் வழக்கை சிபிஐ-க்கு மாற்றகோரிய உத்தரவை எதிர்த்து வழக்கறிஞர் யானை ராஜேந்திரன், டிராபிக் ராமசாமி ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 

 

இந்நிலையில் சிலைகடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குவதாக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 

 இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் நவம்பர் 22ம் தேதி வழக்கின் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு கடந்த ஆகஸ்ட் ஒன்றாம் தேதி உத்தரவிட்டது.

 

சிபிஐக்கு மாற்றி பிறப்பித்த அரசாணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கனவே இடைக்கால தடை விதித்திருந்தது. இந்நிலையில் இந்த வழக்கின்  தீர்ப்பு நாளை அறிவிக்க உள்ளது உயர்நீதிமன்றம்.

 

 

சார்ந்த செய்திகள்