r n

தமிழகத்தில் நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுவதாக இருந்தது. இதை முன்னிட்டு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தில் நாளை மறுநாள்(16.6.2018) ரம்ஜான் கொண்டாடப்படும் என்று தலைமை காஜி அறிவித்துள்ளார். இன்று பிறை தெரியாததால் நாளை மறுநாள் ரம்ஜான் கொண்டாடப்படும் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து ரம்ஜானுக்காக நாளை பள்ளிகளுக்கு அறிவிக்கப்பட்டிருந்த விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.