ADVERTISEMENT

பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை மற்றும் தேர்வுகள் ஒத்திவைப்பு...

06:13 PM Nov 21, 2018 | kamalkumar

ADVERTISEMENT

கஜா புயல் சீரமைப்பு பணிகள் நடந்துவருவதையொட்டி நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பொறியியல் கல்லூரிகளில் நாளை மற்றும் நாளைமறுநாள் நடக்கவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. நாகை வருவாய் கோட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும், புதுச்சேரியிலுள்ள பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சை சரபோஜி கல்லூரி தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. சீர்மிகு சட்டப்பள்ளி, மற்றும் மாநிலம் முழுவதுமுள்ள சட்டக்கல்லூரிகளுக்கும் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்த ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளின் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT