தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் மழையைப் பொறுத்து பள்ளிக் கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்து வருகிறார்கள். இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது.
இதனால் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே நாளை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில் நாளை திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை எனமாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் தெரிவித்துள்ளார்.