Skip to main content

சுங்கச்சாவடி ஊழியர்கள் தொடர் போராட்டம்!  

Published on 03/10/2022 | Edited on 03/10/2022

 

Tollgate workers on struggle

 

 

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் சுமார் 130க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பல ஆண்டுகளாக பணி செய்து வருகின்றனர். இந்த நிலையில், டோல்கேட் நிர்வாகம் நேற்று முன்தினம் திடீரென 28 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், டோல்கேட் நிர்வாகத்தை கண்டித்தும், மீண்டும் பணி வழங்க கோரியும் நுழைவு வாயில் அமர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

 

இதுகுறித்து தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் சரவன்குமார் ஆலோசனையின் பேரில் திருக்கோவிலூர் கோட்டாட்சியர் யோக ஜோதி தலைமையில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் உளுந்தூர்பேட்டை எம்.எல்.ஏ மணிகண்ணன், நகராட்சி துணைத்தலைவர் வைத்தியநாதன் மற்றும் சி.பி.எம்., சி.பி.ஐ., அ.தி.மு.க, பா.ம.க, வி.சி.க உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் நிர்வாகத்திடம் சென்று பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு எட்டப்படாததால் நேற்று முன்தினம் பகல் இரவு என போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

 

இந்த நிலையில் தாசில்தார் மணிமேகலை, தொழிலாளர் துறை உதவி இயக்குநர் ஆனந்தன் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் டி.எஸ்.பி. மகேஷ் ஆகியோர் ஒரு பக்கம் டோல்கேட் மேலாளர் இடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது முன்னறிவிப்பு இன்றி தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்யக்கூடாது என்றும் உரிய இழப்பீடு தொகை வழங்கி தொழிலாளர் நலசட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியதோடு நீக்கப்பட்ட அனைத்து பணியாளர்களையும் வேலைக்கு அழைத்துக் கொள்ள வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டு இதற்காக ஒரு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

 

அந்த ஒப்பந்தத்தில் அனைவரும் கையெழுத்திட்ட நிலையில் டோல்கேட் நிர்வாகத்தினர் அந்த தொழிலாளர்களுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்து போட மறுத்து விட்டனர். இதனால் தொழிலாளர்களின் உள்ளிருப்பு போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருவதால் டோல்கேட் பகுதியில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தொழிலாளர்கள் போராட்டத்தின் காரணமாக சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் அனைத்து வாகனங்களும் கட்டணம் இன்றி இலவசமாக சென்று வருகிறது. இதனால் டோல்கேட் நிர்வாகத்திற்கு பல லட்சம் இழப்பு ஏற்பட்டு உள்ளது.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அடுத்தடுத்து நிகழ்ந்த விபத்து; 2 பேர் பலியான சோகம்

Published on 29/01/2024 | Edited on 29/01/2024
A subsequent incident; Tragedy with 2 peoples

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஆசனூர் சிப்காட் எதிரே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சரக்கு லாரி ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது லாரியின் வேகத்தை டிரைவர் திடீரென குறைத்ததாக கூறப்படுகிறது. அதே சமயம் திண்டுக்கல்லில் இருந்து சென்னையை நோக்கி லாரிக்கு பின்னால் வந்த கார் லாரியின் பின்பக்கம் மோதியுள்ளது. இந்த சூழலில் திருச்சியில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி சென்ற தனியார் சொகுசு பேருந்து காரின் மீது மோதியது.

இதனால் விபத்தில் சிக்கிய பேருந்து சாலையின் ஓரத்தில் இருந்து சுமார் 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. அடுத்தடுத்து நிகழ்ந்த இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த சம்பவத்தில் காரில் பயணம் செய்த தாய் மற்றும் மகள் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். இவர்கள் இருவரின் உடல்களும் உடற்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

மேலும் பேருந்தில் பயணித்த 30க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த இடைக்கல் போலீசார் இந்த விபத்து குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து சம்பவத்தால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. லாரி மீது கார் மற்றும் பேருந்து அடுத்தடுத்து மோதிய விபத்தில் தாய் மற்றும் மகன் என 2 பேர் பலியான சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

'கியர் மாற்ற தெரியலங்க' - நடுரோட்டில் நிறுத்திய தற்காலிக பேருந்து ஓட்டுநர்

Published on 09/01/2024 | Edited on 09/01/2024
'Gear change therialanga' - temporary bus driver stopped in the middle of the road

தமிழகத்தில் அரசுப் போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்த வேலைநிறுத்தம் நள்ளிரவில் இருந்து தொடங்கி உள்ளது. இருப்பினும் சென்னையில் வழக்கம்போல் மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதே போன்று தமிழகத்தின் விழுப்புரம், சேலம், கோயம்புத்தூர், கும்பகோணம், மதுரை திருநெல்வேலி ஆகிய மண்டலங்களில் இருந்தும் பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் சில இடங்களில் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கும் திமுக தொழிற்சங்க தொழிலாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சில இடங்களில் குறைந்த அளவே பேருந்துகள் இயக்கப்பட்டதால் பேருந்துகள் நிரம்பி வழியும் சூழல் ஏற்பட்டது.

பல இடங்களில் தற்காலிக ஓட்டுநர்களை பயன்படுத்தி பேருந்துகள் இயக்கப்பட்டது. இந்நிலையில் கள்ளக்குறிச்சியில் தற்காலிக பேருந்து ஓட்டுநர் தன்னால் பேருந்தை இயக்க முடியவில்லை என பாதி வழியில் நிறுத்திவிட்டு சென்றது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

உளுந்தூர்பேட்டையில் இருந்து விருத்தாசலம் செல்லும் 16E என்ற பேருந்து பணிமனையில் இருந்து தற்காலிக ஓட்டுநர் ஒருவரால் எடுத்துச் செல்லப்பட்டது. ஆனால், குறிப்பிட்டு தூரத்திலேயே பேருந்து நிறுத்தப்பட்டது. இது குறித்து அறிந்த அதிகாரிகள் அங்கு சென்று தற்காலிக ஓட்டுநரிடம் கேட்டதற்கு தான் மினி டெம்போ ஓட்டி வந்ததாகவும், தன்னால் பேருந்தை ஓட்ட முடியவில்லை. வளைவில் செல்லும் போது கியர் மாற்ற தெரியவில்லை என கூறியதாக கூறப்படுகிறது. இதனால் வேறு நபரை வைத்து பேருந்து பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.