இரு மடங்கு சுங்கக்கட்டணம் கேட்ட ஊழியரைத் தாக்கிய பெண்!

toll plazas employees car women incident viral video

செங்கல்பட்டு மாவட்டம், பரனூர் சுங்கச்சாவடியில் பெண் ஒருவர் சுங்கச்சாவடி ஊழியரைத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று (31/03/2022) நள்ளிரவு பரனூர் சுங்கச்சாவடிக்கு காரில் வந்த பெண்ணுக்கு, அவரது ஃபாஸ்டேக்கில் பணம் இல்லாததால், சுங்கச்சாவடி ஊழியரிடம் அவரிடம் 110 ரூபாய் கட்டணம் செலுத்துமாறு கேட்டுள்ளார். இரு மடங்கு கட்டணமாக இருப்பதாகக் கூறி, கோபத்துடன் அந்த பெண்ணும், அவருடன் வந்த நபரும், சுங்கச்சாவடி ஊழியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் அந்த பெண், சுங்கச்சாவடி ஊழியரைத் தாக்கினார். அவருடன் வந்த நபரும், ஊழியரைத் தாக்கியும், சுங்கச்சாவடியின் கண்ணாடியை உடைத்தும் சண்டையிட்டனர். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

செங்கல்பட்டைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர், சுங்கச்சாவடி ஊழியர் ஒருவரைத் தாக்கிய நிலையில், தற்போது மேலும் ஒரு பெண் சுங்கச்சாவடி ஊழியரைத் தாக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

employees incident Women
இதையும் படியுங்கள்
Subscribe