தமிழகத்தில் இன்று மேலும் 5,975பேருக்கு கரோனாபாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று கரோனா உறுதி செய்யப்பட்டவர்களில்5,942 பேர் தமிழ்நாட்டையும், மற்றவர்கள் பிற மாநில மற்றும் பிற நாடுகளிலிருந்து தமிழகம் வந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இதனால் தமிழகத்தில் இதுவரைகரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,79,385 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 53,541 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில்கரோனாபாதிப்பு எண்ணிக்கை 1,298ஆகப் பதிவாகியுள்ளது. கடந்த ஜூன் 3 -ஆம் தேதி சென்னையில் 1,012 என்ற எண்ணிக்கையில் கரோனா பாதிப்பு பதிவாகியிருந்தது. சென்னையில் இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை1,25,389 ஆக அதிகரித்துள்ளது.அதேபோல் தமிழகத்தில் ஒரே நாளில்70,127கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று மேலும் 6,047 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் கரோனாலிருந்து குணமடைந்தோர்எண்ணிக்கை 3,19,327 ஆக அதிகரித்துள்ளது. எனவே, கரோனாவிற்கு சிகிச்சை பெறுவோர்களைவிட குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி 97 பேர் இறந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் 21 நாட்களாக100-ஐ கடந்திருந்த கரோனா உயிரிழப்பு எண்ணிக்கை இன்று 2வது நாளாக 100க்கும் கீழ் குறைந்துள்ளது. தமிழகத்தில்கரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 6,517 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 2,581 பேர் இதுவரை கரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர்.சென்னைக்கு அடுத்தபடியாகச் செங்கல்பட்டில் 376பேரும், திருவள்ளூரில் 374பேரும்உயிரிழந்துள்ளனர்.