Advertisment

மழை எதிரொலி: பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

ரகத

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துவருகிறது. இதனால்தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்துவருகிறது. சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்குகிறது. இதன் காரணமாக பல மாவட்டங்களில் இன்றும் (10.11.2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Advertisment

அதன்படி, சென்னை, திருவள்ளூர்,காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, கடலூர், விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், கரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தேனி ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி ராமநாதபுரம், திருச்சி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நாளைவரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

rain
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe