Skip to main content

''இந்நாள் என் வாழ்வில் மகிழ்ச்சியான நாள்'' - கண்ணீர்விட்ட மாணவியின் தந்தைக்கு ஆறுதல் கூறிய முதல்வர்!!

Published on 18/11/2020 | Edited on 18/11/2020

 

 'Today is the happiest day of my life' '-edappadi palanisamy

 

தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவப் படிப்பில் 7.5 சதவிகித உள் ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இந்த 7.5 சதவிகித உள் ஒதுக்கீட்டின் படி, அரசுப் பள்ளி மாணவர்கள் 405 பேர் மருத்துவம் பயில்வதற்குத் தேர்வாகியுள்ளனர். இவர்களில் முதல் 18 பேருக்கு மருத்துவக் கலந்தாய்விற்கான ஒதுக்கீட்டு ஆணையை வழங்கும் நிகழ்ச்சி, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.


இந்த நிகழ்வில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர். அதேபோல் ஒதுக்கீட்டின் கீழ் தகுதி பெற்றுள்ள மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர். நீட் தேர்வை ரத்து செய்யத் தொடர்ந்து மத்திய அரசிடம் வலியுறுத்தி வருவதாக தெரிவித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தொடர்ந்து அதற்கான சட்ட போராட்டமும் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

 

மேலும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் பயனளிக்கும் வகையில் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டை கொண்டுவந்துள்ளோம். "இந்த நாள் என் வாழ்வில் மகிழ்ச்சிகரமான நாள், அரசுப் பள்ளியில் பயின்ற எனக்கு மனநிறைவை கொடுத்த திருநாள் இந்நாள்'' எனவும் தெரிவித்தார். 


இந்த நிகழ்வில் கலந்துகொண்ட மாணவர்களும், பெற்றோர்களும் கண்ணீர் மல்க முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர். அதில் கண்ணீருடன் பேசிய அரசுப் பள்ளி மாணவி ஒருவரின் தந்தை, ''எங்க அப்பா படிக்காதவருங்க. இந்தக் காலத்துல என் பிள்ளைக்கு டாக்டர் படிக்க சீட்டு கொடுத்த சாமிக்கு நன்றிங்க, வாழ்க்கையில் மறக்கவே முடியாதுங்க ஐயா'' எனக் கண்ணீருடன் முதல்வரின் காலில் விழ, தமிழக முதல்வர் அவரை தடுத்து ஆறுதல் கூறினார். இது அங்கிருந்தோரை நெகிழச் செய்தது.   

 

 

 

சார்ந்த செய்திகள்