Advertisment

கர்நாடகாவில் சாலை விபத்து- தமிழக பக்தர்கள் 10 பேர் பலி!

கர்நாடக மாநிலத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் தமிழக பக்தர்கள் 10 பேர் உள்பட 12 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

Advertisment

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சீக்கணப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த 12பேர் காரில் கர்நாடக மாநிலத்தில் உள்ள தர்மஸ்சாலா கோவிலுக்குச்சென்றனர். பின்பு தரிசனம் செய்து விட்டு ஊர் திரும்பும் போது தும்கூர் அருகே குனிகல் பகுதியில் கார் சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தமிழக பக்தர்கள் 10 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் தமிழக பக்தர்களின் காரை தொடர்ந்து பின்னால் வந்த காரும் விபத்தில் சிக்கியதில் பெங்களூரைச் சேர்ந்த 2 பேரும் பலியாகினர்.

Advertisment

today early morning incident in karnataka

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர். காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதேபோல்உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த காவல்துறையினர், இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

peoples incident high way karnataka
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe