Skip to main content

ஒரே நாளில் 44,000-ஐ கடந்த கரோனா பரிசோதனை!!! இதுவரை இல்லாத அளவிற்கு குணமடைந்தோர் எண்ணிக்கை...!!

Published on 16/07/2020 | Edited on 16/07/2020
today corona rate in tamilnadu

 

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,549 பேருக்கு  கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் இன்று ஒரே நாளில் 5,106 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இரண்டாவது நாளாக ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  இந்த எண்ணிக்கை என்பது இதுவரை இல்லாத அளவு ஆகும். அதேபோல் கரோனாவில் இருந்து இதுவரை குணமடைந்தோர்  எண்ணிக்கை 1,07,416 ஆக அதிகரித்துள்ளது.  47,714 பேர் தற்பொழுது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.   

 

தமிழகத்தில் இதுவரை கரோனா  மொத்த பாதிப்பு என்பது 1,56,369 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 44,186 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், 4,549 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரை விட குணமடைந்தவர்கள் எண்ணிக்கை என்பது தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. அதே போல் இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, 69 பேர் உயிரிழந்துள்ளனர். அரசு மருத்துவமனைகளில் 44 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 25 பேரும் இன்று கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கரோனா  உயிரிழப்பு எண்ணிக்கை என்பது 2,236 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 47 வது நாளாக தொடர்ந்து இரட்டை இலக்கத்தில் கரோனா உயிரிழப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

 

சென்னையில் மட்டும் கரோனா பாதிப்பால் மேலும் 23 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் சென்னையில் அதிகபட்சமாக உயிரிழப்பு எண்ணிக்கை என்பது 1,341 ஆக அதிகரித்துள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 176, திருவள்ளூரில் 141, காஞ்சிபுரத்தில் 58, மதுரை 134, ராமநாதபுரம் 39, திருவண்ணாமலை 26 பேர்  என்ற எண்ணிக்கையில் உயிரிழப்பபு உள்ளது. சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் இதுவரை கரோனாவால்  895 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

சென்னையில் இன்று ஒரே நாளில் 1,157 பேருக்கு கரோனா பாதிப்பை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு என்பது 82, 168 ஆக அதிகரித்துள்ளது.

 

சென்னை தவிர பிற மாவட்டங்களில் இன்று ஒரே நாளில் 3,392 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூரில் ஒரே நாளில் 526, மதுரையில் ஒரே நாளில் 267 பேருக்கும், வேலூரில் 253 பேருக்கும், திருவண்ணாமலையில் 212 பேருக்கும், செங்கல்பட்டில் 179, தூத்துக்குடி 171, கன்னியாகுமரி 146, ராணிப்பேட்டை, விருதுநகரில் 145, நெல்லை 130, திண்டுக்கல் 126, விழுப்புரத்தில் 105, திருச்சியில் 94, சிவகங்கை 83 ,தேனி 78, கள்ளக்குறிச்சி 71, சேலம் 70, காஞ்சிபுரம் 67 பேருக்கு இன்று ஒரே நாளில் கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

வாக்கு சதவீதத்தில் முரண்; அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Discrepancy in vote percentage; Finally the Election Commission issued the notification

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனையடுத்து, தமிழகத்தில் பதிவான வாக்கு சதவீதங்கள் குறித்த தகவல் நேற்று மாலை 7 மணிக்கு வெளியாகியிருந்த நிலையில் அதனைத் தொடர்ந்து இரவு 12 மணிக்கு வேறொரு வாக்கு சதவீத தகவல் வெளியாகி இருந்தது. தற்பொழுது வரை இறுதி வாக்குப்பதிவு சதவீதம் குறித்த தகவல் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை.

இது தொடர்பாக மதியம் 12 மணிக்கு தலைமை தேர்தல் அதிகாரி செய்தியாளர்களைச் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென அந்தச் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மாலை 3 மணி,  5 மணி எனத் தள்ளிப் போடப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பு தற்போது வரை நடக்காததால் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது.

வாக்குப் பதிவுகள் முடிந்து 24 மணி நேரம் ஆன பிறகும் ஒட்டு மொத்த தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் இன்னும் வெளியாகாதது சந்தேகத்தைக் கிளப்பிய நிலையில், தற்போது தமிழகத்தில் 69.46 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. 

அறிவிப்பின்படி அதிகபட்சமாக தர்மபுரியில் 81.48 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. கள்ளக்குறிச்சி 79-25 சதவிகிதம்,  நாமக்கல் 78.16 சதவீதம், சேலம்-78.13 சதவீதம், திருவள்ளூர்-68.31 சதவீதம், வடசென்னை-60.13 சதவீதம், தென் சென்னை- 54.27  சதவீதம், மத்திய சென்னை-53.91 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-60.21 சதவீதம், காஞ்சிபுரம் -71.55 சதவீதம், அரக்கோணம்-74.08 சதவீதம், வேலூர்-73.42 சதவீதம், கிருஷ்ணகிரி-71.31 சதவீதம், திருவண்ணாமலை-73.88 சதவீதம், ஆரணி-75.65 சதவீதம், விழுப்புரம்-76 47 சதவீதம், ஈரோடு-70.54 சதவீதம், திருப்பூர்-70.58 சதவீதம், நீலகிரி-70.93 சதவீதம், கோவை-64.81 சதவீதம், பொள்ளாச்சி-70.70 சதவீதம், திண்டுக்கல்-70.99 சதவீதம், கரூர்- 78.61 சதவீதம், திருச்சி-67.45 சதவீதம், பெரம்பலூர்-77.37 சதவீதம், கடலூர்-72.28 சதவீதம், சிதம்பரம்-75.32 சதவீதம், மயிலாடுதுறை-70.06 சதவீதம், நாகை-71.55 சதவீதம், தஞ்சை-68.18 சதவீதம், மதுரை-61.92 சதவீதம், சிவகங்கை-63.94 சதவீதம், தேனி-69.87 சதவீதம், விருதுநகர்-70.17 சதவீதம், ராமநாதபுரம்-68.18 சதவீதம், தூத்துக்குடி-59.96 சதவீதம், தென்காசி-67.55 சதவீதம், திருநெல்வேலி-64.10 சதவீதம், கன்னியாகுமரி-65.46 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

அதேபோல் எந்தத் தொகுதியிலும் மறு வாக்குப் பதிவு இல்லை எனவும், தனிப்பட்ட தரவுகள் வர இருப்பதால் இது  இறுதியானது இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.