today corona rate in tamilnadu

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,549 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.அதேபோல் இன்று ஒரே நாளில் 5,106 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இரண்டாவது நாளாக ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்த எண்ணிக்கை என்பது இதுவரை இல்லாத அளவு ஆகும். அதேபோல் கரோனாவில் இருந்து இதுவரை குணமடைந்தோர்எண்ணிக்கை 1,07,416 ஆக அதிகரித்துள்ளது. 47,714 பேர் தற்பொழுது மருத்துவமனைகளில்சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisment

தமிழகத்தில் இதுவரை கரோனா மொத்த பாதிப்பு என்பது1,56,369 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில்44,186 பேருக்கு கரோனாபரிசோதனை செய்யப்பட்டதில், 4,549 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரைவிட குணமடைந்தவர்கள் எண்ணிக்கை என்பது தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. அதே போல் இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, 69 பேர் உயிரிழந்துள்ளனர். அரசு மருத்துவமனைகளில் 44 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 25 பேரும் இன்று கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கரோனா உயிரிழப்பு எண்ணிக்கை என்பது 2,236 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 47 வது நாளாக தொடர்ந்து இரட்டை இலக்கத்தில் கரோனா உயிரிழப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

சென்னையில் மட்டும் கரோனாபாதிப்பால் மேலும் 23 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் சென்னையில் அதிகபட்சமாக உயிரிழப்பு எண்ணிக்கை என்பது1,341 ஆக அதிகரித்துள்ளது.சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 176, திருவள்ளூரில் 141, காஞ்சிபுரத்தில் 58,மதுரை 134, ராமநாதபுரம் 39, திருவண்ணாமலை 26 பேர் என்ற எண்ணிக்கையில் உயிரிழப்பபுஉள்ளது.சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் இதுவரை கரோனாவால் 895 பேர் உயிரிழந்துள்ளனர்.

Advertisment

சென்னையில் இன்று ஒரே நாளில்1,157 பேருக்குகரோனாபாதிப்பை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு என்பது 82,168 ஆக அதிகரித்துள்ளது.

சென்னை தவிர பிற மாவட்டங்களில் இன்று ஒரே நாளில்3,392 பேருக்குகரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூரில் ஒரே நாளில்526, மதுரையில் ஒரே நாளில் 267 பேருக்கும், வேலூரில் 253 பேருக்கும், திருவண்ணாமலையில் 212 பேருக்கும், செங்கல்பட்டில் 179, தூத்துக்குடி 171, கன்னியாகுமரி 146, ராணிப்பேட்டை, விருதுநகரில் 145,நெல்லை 130,திண்டுக்கல் 126, விழுப்புரத்தில் 105,திருச்சியில் 94, சிவகங்கை 83 ,தேனி 78, கள்ளக்குறிச்சி 71,சேலம் 70, காஞ்சிபுரம் 67 பேருக்கு இன்று ஒரே நாளில்கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.