
தமிழகத்தில் இரண்டாம் அலை காரணமாக நாளுக்கு நாள் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் ஒரே நாளில் 27,397 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று சென்னையில் ஒரே நாளில் 6,846 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கரோனா சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 1,39,401 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் 23,110 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் இதுவரை தமிழகத்தில் குணமடைந்து வீடு திரும்பினோர் எண்ணிக்கை 11,96,549 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி தமிழகத்தில் 195 பேர் உயிரிழந்த நிலையில், இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி தமிழகத்தில் 241 பேர் கரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். ஒரே நாள் உயிரிழப்பு 200 ஐ தாண்டியுள்ளது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசு மருத்துவமனைகளில் 150 பேரும் தனியார் மருத்துவமனைகளில் 90 பேரும் கரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கரோனா உயிரிழப்பு மொத்த எண்ணிக்கை 15,412 ஆக அதிகரித்துள்ளது.