தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கரோனா உயிரிழப்பு!!! தொடர்ந்து சென்னை தவிர பிற மாவட்டங்களில் அதிகரிக்கும் பாதிப்பு!!

Today corona rate in tamilnadu

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,965பேருக்குகரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று 36,628 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் இந்த எண்ணிக்கை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் மொத்தமாக இதுவரை கரோனாஉறுதிசெய்யப்பட்டோர்எண்ணிக்கை என்பது 1,34,226 ஆக உயர்ந்துள்ளது. தற்பொழுது தமிழகத்தில் கரோனாவுக்கு 46,410 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.அதேபோல் சென்னையில் எட்டாவது நாளாக இரண்டாயிரத்திற்கும் குறைவாக கரோனாஉறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று ஒரே நாளில் சென்னையில் 1,185பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு என்பது 76,000-ஐகடந்துள்ளது. 76,150 பேருக்கு இதுவரை சென்னையில் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 3,591 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்கள்எண்ணிக்கை 85,915 ஆக அதிகரித்துள்ளது.அதேபோல் தமிழகத்தில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவவோரைவிட குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, தமிழகத்தில் கரோனாவால்அரசு மருத்துவமனைகளில் 51பேரும், தனியார் மருத்துவமனைகளில்18 பேரும்உயிரிழந்துள்ளனர்.வேறு நோய் பாதிப்பு இல்லாத 8 பேர்கரோனாவால்இன்று உயிரிழந்துள்ளனர். சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 24 வயது இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தமிழகத்தில்உயிரிழப்பு அதிகபட்சமாக 68 என்ற எண்ணிக்கையிலிருந்தநிலையில், இன்று 69 என உயர்ந்துள்ளது. இதனால் தமிழகத்தில் கரோனாவால் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,898 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 42 ஆவது நாளாக தொடர்ந்து இரட்டை இலக்கத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை என்பது பதிவாகி வருகிறது.

சென்னையில் மட்டும் கரோனா பாதிப்பால் இன்று ஒரே நாளில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தமாக சென்னையில் 1,221 பேர் உயிரிழந்துள்ளனர்.சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 154 பேரும், திருவள்ளூரில் 122 பேரும்,காஞ்சிபுரத்தில் 46 மதுரையில் 111, ராமநாதபுரத்தில் 32 பேரும் உயிரிழந்துள்ளனர்.

சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில்கரோனாவால் இதுவரை, 677 பேர் உயிரிழந்துள்ளனர்.அதேபோல் இன்று ஒரே நாளில் சென்னை தவிர்த்து,பிற மாவட்டங்களில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை என்பது 2,780 உள்ளது.

திருவள்ளூரில் 346 பேருக்கு இன்று ஒரே நாளில் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.அதேபோல் மதுரையில் 277, செங்கல்பட்டில் 237, தூத்துக்குடியில் 175,வேலூரில் 135, கன்னியாகுமரியில் 133,தேனியில் 119, காஞ்சிபுரத்தில் 119, கள்ளக்குறிச்சியில் 102,சேலத்தில்136, விருதுநகரில் 94, ராமநாதபுரத்தில் 81,கோவையில் 71, சிவகங்கையில் 67,விழுப்புரத்தில் 44, ஈரோட்டில் 42, புதுக்கோட்டையில் 36, தஞ்சாவூரில் 27 பேருக்கும் இன்றுகரோனாஉறுதிசெய்யப்பட்டுள்ளது.

corona virus Tamilnadu
இதையும் படியுங்கள்
Subscribe