Skip to main content

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கரோனா உயிரிழப்பு!!! தொடர்ந்து சென்னை தவிர பிற மாவட்டங்களில் அதிகரிக்கும் பாதிப்பு!!

Published on 11/07/2020 | Edited on 11/07/2020
Today corona rate in tamilnadu

 

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,965 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று 36,628 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் இந்த எண்ணிக்கை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் மொத்தமாக இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை என்பது 1,34,226 ஆக உயர்ந்துள்ளது. தற்பொழுது தமிழகத்தில் கரோனாவுக்கு 46,410 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல் சென்னையில் எட்டாவது நாளாக இரண்டாயிரத்திற்கும் குறைவாக  கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

இன்று ஒரே நாளில் சென்னையில் 1,185 பேருக்கு  கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு என்பது 76,000-ஐ கடந்துள்ளது. 76,150 பேருக்கு இதுவரை சென்னையில் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 3,591 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 85,915 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் தமிழகத்தில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவவோரைவிட குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 

 

இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, தமிழகத்தில் கரோனாவால் அரசு மருத்துவமனைகளில் 51 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 18 பேரும் உயிரிழந்துள்ளனர். வேறு நோய் பாதிப்பு இல்லாத 8 பேர் கரோனாவால் இன்று உயிரிழந்துள்ளனர். சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 24 வயது இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தமிழகத்தில் உயிரிழப்பு அதிகபட்சமாக 68 என்ற எண்ணிக்கையிலிருந்த நிலையில், இன்று 69 என உயர்ந்துள்ளது. இதனால் தமிழகத்தில் கரோனாவால் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,898 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 42 ஆவது நாளாக தொடர்ந்து இரட்டை இலக்கத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை என்பது பதிவாகி வருகிறது.

 

சென்னையில் மட்டும் கரோனா பாதிப்பால் இன்று ஒரே நாளில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தமாக சென்னையில் 1,221 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 154 பேரும், திருவள்ளூரில் 122 பேரும், காஞ்சிபுரத்தில் 46 மதுரையில் 111, ராமநாதபுரத்தில் 32 பேரும் உயிரிழந்துள்ளனர்.

 

சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் கரோனாவால் இதுவரை, 677 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல் இன்று ஒரே நாளில் சென்னை தவிர்த்து, பிற மாவட்டங்களில்  கரோனா  பாதிப்பு எண்ணிக்கை என்பது 2,780 உள்ளது.

 

திருவள்ளூரில் 346 பேருக்கு இன்று ஒரே நாளில்  கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் மதுரையில் 277, செங்கல்பட்டில் 237, தூத்துக்குடியில் 175, வேலூரில் 135, கன்னியாகுமரியில் 133, தேனியில் 119, காஞ்சிபுரத்தில் 119, கள்ளக்குறிச்சியில் 102, சேலத்தில் 136,  விருதுநகரில் 94, ராமநாதபுரத்தில் 81, கோவையில் 71, சிவகங்கையில் 67, விழுப்புரத்தில் 44, ஈரோட்டில் 42, புதுக்கோட்டையில் 36, தஞ்சாவூரில் 27 பேருக்கும் இன்று கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.