Skip to main content

ஒற்றை இலக்கத்தில் கரோனா உயிரிழப்பு!! - தமிழகத்தில் இன்றைய கரோனா நிலவரம்!

Published on 30/11/2020 | Edited on 30/11/2020

 

today corona rate in tamilnadu

 

தமிழகத்தில் 18 -ஆவது நாளான இன்றும், 2 ஆயிரத்திற்கும் குறைவாக 1,410 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், இதுவரை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை, 7,81,915 ஆக உயர்ந்துள்ளது. கடந்த வாரம் தமிழகத்தில் கரோனாவிற்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை, 12 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் இருந்தது. இன்று, அந்த எண்ணிக்கை, 10,997 பேர் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

சென்னையில், கரோனா பாதிப்பு எண்ணிக்கை 385 ஆக பதிவாகியுள்ளது. இதனால், சென்னையில் 44 -ஆவது நாளாக 1,000 -க்கும் குறைவாகக் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 2,15,360 ஆக அதிகரித்துள்ளது. இன்று, ஒரேநாளில் தமிழகத்தில் 62,131 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது.

 

தமிழகத்தில், இன்று மேலும் 1,456 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை, தமிழகத்தில் கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 7,59,206 ஆக அதிகரித்துள்ளது. எனவே, கரோனாவிற்கு சிகிச்சை பெறுவோர்களைவிட, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, கரோனாவால் 9 பேர் இறந்துள்ளனர். பல நாட்களுக்குப் பிறகு ஒற்றை இலக்கத்தில், இன்று கரோனா உயிரிழப்பு பதிவாகியுள்ளது. இதனால், தமிழகத்தில் கரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 11,712 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் 3,850 பேர் இதுவரை கரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்