21 நாட்களுக்குப் பிறகு சென்னையில் மீண்டும் அதிகரித்த கரோனா பாதிப்பு...!!

today corona rate in tamilnadu

தமிழகத்தில் இன்று மேலும் 5,692பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.இன்று கரோனா உறுதி செய்யப்பட்டவர்களில், 5,679 பேர் தமிழ்நாட்டையும், மற்றவர்கள் பிற மாநிலம் மற்றும் பிற நாடுகளிலிருந்துவந்தவர்கள் என்பதுதெரியவந்துள்ளது.இதனால் தமிழகத்தில் இதுவரை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின்எண்ணிக்கை 5,83,691 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் 46,405 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

21 நாட்களுக்குப் பிறகு சென்னையில் 1,000க்கும் மேல் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில், கரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,089ஆகபதிவாகியுள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 1,59,683 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் தமிழகத்தில், ஒரே நாளில்88,784கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று மேலும் 5,470 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 5,08,210 ஆக அதிகரித்துள்ளது. எனவே, கரோனாவிற்கு சிகிச்சை பெறுவோர்களைவிட குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி 66 பேர் இறந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 9,076ஆக அதிகரித்துள்ளது.அதிகபட்சமாக சென்னையில் இதுவரை 3,111 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னை அல்லாத பிற மாவட்டங்களில்4,603பேருக்கு ஒரே நாளில் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து சில நாட்களாகவே கரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கோவையில் அதிகரித்து வரும் நிலையில், இன்றும் கோவையில் ஒரே நாளில் 642பேருக்குகரோனாஉறுதி செய்யப்பட்டுள்ளது. அடுத்தபடியாக சேலத்தில்311பேருக்கு ஒரே நாளில்கரோனாஉறுதி செய்யப்பட்டுள்ளது.

corona virus Tamilnadu
இதையும் படியுங்கள்
Subscribe