தமிழகத்தில் இன்று மேலும் 5,652பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.இன்று கரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 5,645 பேர் தமிழ்நாட்டையும், மற்றவர்கள் பிற மாநிலம் மற்றும் பிற நாடுகளிலிருந்து வந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.இதனால் தமிழகத்தில் இதுவரை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின்எண்ணிக்கை 5,19,860 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் 46,633 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை983 ஆகபதிவாகியுள்ளது.சென்னையில் மட்டும் இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 1,51,560 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் தமிழகத்தில் ஒரே நாளில் 82,644கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று மேலும் 5,768 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4,64,668 ஆக அதிகரித்துள்ளது. எனவே, கரோனாவிற்கு சிகிச்சை பெறுவோர்களைவிட குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி 57 பேர் இறந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 8,559 ஆக அதிகரித்துள்ளது.அதிகபட்சமாக சென்னையில் இதுவரை 3,013 பேர் உயிரிழந்துள்ளனர்.சென்னை அல்லாத பிற மாவட்டங்களில்ஒரேநாளில் 4,669பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.