today corona rate in tamilnadu

தமிழகத்தில் இன்று மேலும் 5,783 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.இன்று கரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 5,773 பேர் தமிழ்நாட்டையும், மற்றவர்கள் பிற மாநிலம் மற்றும் பிற நாடுகளிலிருந்து வந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.இதனால் தமிழகத்தில் இதுவரை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 4,63,480 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல்51,458 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 955 ஆகபதிவாகியுள்ளது. கடந்த ஜூன் 3 -ஆம் தேதி சென்னையில் 1,012 என்ற எண்ணிக்கையில் கரோனா பாதிப்பு பதிவாகியிருந்தது. சென்னையில் மட்டும் இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 1,41,654 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் தமிழகத்தில் ஒரே நாளில் 84,034 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது.

Advertisment

தமிழகத்தில் இன்று மேலும் 5,820 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4,04,186 ஆக அதிகரித்துள்ளது. எனவே, கரோனாவிற்கு சிகிச்சை பெறுவோர்களைவிட குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி 88 பேர் இறந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 7,836 ஆக அதிகரித்துள்ளது.அதிகபட்சமாக சென்னையில் இதுவரை2,862 பேர் உயிரிழந்துள்ளனர்.சென்னை அல்லாத பிற மாவட்டங்களில்ஒரேநாளில் 4,828 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாவேகோவையில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில்இன்றும்ஒரே நாளில் கோவையில் 538 பேருக்கும், கடலூரில் 388 பேருக்கும்கரோனாஉறுதி செய்யப்பட்டுள்ளது.