தமிழகத்தில் மேலும் 5,875 பேருக்கு கரோனா இன்று ஒரே நாளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நான்காவது நாளாக 6 ஆயிரத்திற்கும் குறைவாக கரோனா பதிவாகியுள்ளது. இன்று கரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 5,811 பேர் தமிழகத்தையும், மற்றவர்கள் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள். இன்று 58,505 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் இந்த எண்ணிக்கையை உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் இதுவரை தமிழகத்தில் கரோனா செய்யப்பட்டோர் எண்ணிக்கை 2,57,613 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 56,998 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில் இன்று மேலும் 1,065 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 30 ஆவது நாளாக இரண்டாயிரத்திற்கும் குறைவாக கரோனா பதிவாகி வருகிறது. அதேபோல் சென்னையில் மட்டும் கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 1,01,951 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,517 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக இதுவரை கரோனாவிற்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை என்பது 1,96,483 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர்களைவிட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து வருகிறது.
அதேபோல் இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி 98 பேர் உயிரிழந்தனர். அரசு மருத்துவமனைகளில் 75 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 23 பேரும் உயிரிழந்துள்ளனர். அதேபோல் வேறு நோய் பாதிப்பு இல்லாத 8 பேர் கரோனாவால் இன்று உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் ஒட்டுமொத்த கரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 4,132 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 64 நாட்களாக இரட்டை இலக்கத்தில் கரோனா உயிரிழப்பு எண்ணிக்கை என்பது தொடர்ந்து வருகிறது.
சென்னையில் மட்டும் அதிகபட்சமாக 2,157 பேர் இதுவரை கரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 257 பேரும், திருவள்ளூரில் 254 பேரும், மதுரை 253, காஞ்சிபுரம் 117, கோவை 71 விருதுநகர் 96, ராமநாதபுரம் 66, வேலூர் 65, திருவண்ணாமலை 65, திருச்சி 60 என கரோனா உயிரிழப்பு எண்ணிக்கை உள்ளது. அதேபோல் சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் கரோனாவால் 1,975 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
சென்னை அல்லாத பிற மாவட்டங்களில் இன்று ஒரே நாளில் 5 ஆயிரத்திற்கும் கீழ் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 4,810 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. 4 வது நாளாக 5 ஆயிரத்துக்கும் குறைவான பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. விருதுநகரில் 337 பேருக்கும், தேனியில் 309 பேருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது, அதேபோல் திருவள்ளூர் 317, தூத்துக்குடி 271, நெல்லை 291, கடலூர் 144, திருவண்ணாமலை 142, சேலம் 134, புதுக்கோட்டை 125, செங்கல்பட்டில் 446, காஞ்சிபுரத்தில் 393, ராணிப்பேட்டை 189, விழுப்புரம் 99, தென்காசி 95, தஞ்சை 91 என கரோனா எண்ணிக்கை இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.