Skip to main content

தமிழகத்தில் 4-வது நாளாக 6 ஆயிரத்திற்கும் கீழ் கரோனா!!! 2.57 லட்சத்தை கடந்த மொத்த பாதிப்பு!!

Published on 02/08/2020 | Edited on 02/08/2020
todauy corona rate in tamilnadu

 

தமிழகத்தில் மேலும் 5,875 பேருக்கு கரோனா இன்று ஒரே நாளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நான்காவது நாளாக 6 ஆயிரத்திற்கும் குறைவாக கரோனா பதிவாகியுள்ளது. இன்று கரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 5,811 பேர் தமிழகத்தையும், மற்றவர்கள் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள். இன்று 58,505 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் இந்த எண்ணிக்கையை உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் இதுவரை தமிழகத்தில் கரோனா செய்யப்பட்டோர் எண்ணிக்கை 2,57,613 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 56,998 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் இன்று மேலும் 1,065 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 30 ஆவது நாளாக இரண்டாயிரத்திற்கும் குறைவாக கரோனா பதிவாகி வருகிறது. அதேபோல் சென்னையில் மட்டும் கரோனா  உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 1,01,951 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,517 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக இதுவரை கரோனாவிற்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை என்பது 1,96,483 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர்களைவிட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து வருகிறது.

அதேபோல் இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி 98 பேர் உயிரிழந்தனர். அரசு மருத்துவமனைகளில் 75 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 23 பேரும் உயிரிழந்துள்ளனர். அதேபோல் வேறு நோய் பாதிப்பு இல்லாத 8 பேர் கரோனாவால் இன்று உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் ஒட்டுமொத்த கரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 4,132 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 64 நாட்களாக இரட்டை இலக்கத்தில் கரோனா உயிரிழப்பு எண்ணிக்கை என்பது தொடர்ந்து வருகிறது.

சென்னையில் மட்டும் அதிகபட்சமாக 2,157 பேர் இதுவரை கரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 257 பேரும், திருவள்ளூரில் 254 பேரும், மதுரை 253, காஞ்சிபுரம் 117, கோவை 71 விருதுநகர் 96, ராமநாதபுரம் 66, வேலூர் 65, திருவண்ணாமலை 65, திருச்சி 60 என கரோனா உயிரிழப்பு எண்ணிக்கை உள்ளது. அதேபோல் சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் கரோனாவால் 1,975 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

சென்னை அல்லாத பிற மாவட்டங்களில் இன்று ஒரே நாளில் 5 ஆயிரத்திற்கும் கீழ் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 4,810 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. 4 வது நாளாக 5 ஆயிரத்துக்கும் குறைவான பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. விருதுநகரில் 337 பேருக்கும், தேனியில் 309 பேருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது, அதேபோல் திருவள்ளூர் 317, தூத்துக்குடி 271, நெல்லை 291,  கடலூர் 144, திருவண்ணாமலை 142, சேலம் 134, புதுக்கோட்டை 125, செங்கல்பட்டில் 446, காஞ்சிபுரத்தில் 393, ராணிப்பேட்டை 189, விழுப்புரம் 99, தென்காசி 95, தஞ்சை 91 என கரோனா எண்ணிக்கை இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.