/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/sdfedrter_5.jpg)
தமிழகத்தில் இன்று 2,141 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இரண்டாவது முறையாக தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2000ஐ தாண்டியுள்ளது.கடந்த 17 நாட்களாக கரோனவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1000 என்ற நிலையில் இருந்து வந்த நிலையில், தற்போது இரண்டாவது நாளாக ஒரே நாளில் 2000 பேருக்கு கரோனாபாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் இதுவரை கரோனாஉறுதி செய்யப்பட்டோர்எண்ணிக்கை 52,334 என்ற எண்ணிக்கையில் உள்ளது.
இன்று தமிழகத்தில் 2,096 பேருக்கும், மற்றவர்கள் பிற மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. அதேபோல் தமிழகத்தில் 23,065 பேர் மருத்துவமனையில் கரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில் இன்று ஒரே நாளில்1,373 பேருக்கு கரோனாபாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.சென்னையில் மட்டும் 37,070 பேருக்கு இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் சென்னையில் 15வது நாளாக கரோனா எண்ணிக்கை 1000 என்ற நிலையில் தொடர்ந்து வருகிறது. சென்னையில் மட்டும் இதுவரை அதிகபட்சமாக 501 பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, உயிரிழப்பு எண்ணிக்கை 49 ஆக உள்ளது. அரசு மருத்துவமனைகளில்36 பேரும், தனியார் மருத்துவமனைகளில்13 பேரும்உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் மொத்த உயிரிழப்பு625 ஆகஅதிகரித்துள்ளது.அதேபோல் வேறு எந்த விதமான நோய் தொற்றும் இல்லாத 7 பேர் இன்று கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2021-09/fountain-pen-handwriting-012.jpg)