Skip to main content

50க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக பட்டங்களுக்கு செக் வைத்த டி.என்.பி.எஸ்.சி !

Published on 21/05/2019 | Edited on 21/05/2019

 

தமிழ்நாடு அரசு பணியில் சேர தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு மய்யம் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறன்றது. அரசு துறையில் பதவிகளுக்கு குறிப்பிட்ட துறைகளுக்கு குறிப்பிட்ட பட்டபடிப்பு கட்டாயமாக உள்ளது. ஆனால் தமிழக பல்கலைக்கழகங்களில் தனித்தனியே சில புதிய புதிய ஒவ்வொரு துறையும் சார்ந்த படிப்புகளை அறிமுகம் செய்கிறார்கள். 

 

t

 

அந்த சார்ப்பு படிப்புகளை படித்தால் அந்த குறிப்பிட்ட துறை படிப்புக்கு சமமானது என்று சொல்லி தேர்வுகள் எழுதி வந்தனர். ஆனால் தற்போது குறிப்பிட்ட பட்டபடிப்புகள் மட்டுமே தேர்வு எழுதுவதற்கு அனுமதிக்கப்படும் என்று அதன் சார்பு படிப்பு பட்டங்கள் எதுவும் உண்மையான கல்வி தகுதியாக ஏற்க முடியாது என்று அறிவித்துள்து. 

 

அரசு துறையில் வேலை செய்யும் சிலர் தங்களின் அடுத்தக்கட்ட உயர்பதவிகளுக்கு பணியாற்ற பட்டபடிப்பு கட்டாயம் முடித்திருக்க வேண்டும் என்கிற நிலை வருகிற போது தமிழகத்தில் உள்ள ஏராளமான பல்கலைகழகங்களில் வழங்கும் பட்டபடிப்பை படித்து தங்களுடைய பதவி உயர்வை பெற்றுக்கொள்கிறார்கள். 

 

அதே போல புதிதாக தேர்வு எழுதுபவர்களும் இதே போல் படித்து தேர்வுகளில் கலந்து கொள்கிறார்கள் என்பதால் இத்தகைய பட்டபடிப்புக்கு தற்போது தேர்வாணயம் அதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து இந்த பட்டங்களை ஏற்க முடியாது என்று சில பல்கலைகழங்களின் பட்டப்படிப்புகளை சுட்டிகாட்டு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. 

அந்த வகையில் தமிழ்நாட்டில் உள்ள அரசு பல்கலைகழகங்களில் நடத்தப்படும் 50க்கும் மேற்பட்ட இளநிலை முதுநிலை பட்டப்படிப்பு முடித்து பட்டம் பெற்றவர்கள் அரசு தேர்வாணயம் நடத்தும் தேர்வுகளில் பங்கேற்க முடியாது என்று அறிவித்துள்ளது. 

சேலம் பெரியார் பல்கலைகழகத்தில் பிசிஏ படிப்பு பி.எஸ்.சி. கணித பாடத்திற்கு இணையான பட்டமாக கருத முடியாது. 

 

பாரதியார் பல்கலைகழகம், திருவள்ளுர் பல்கலைகழகம், காமராஜர் பல்கலைகழகம், பெரியார் பல்கலைகழகம் ஆகியவற்றில் வழங்கப்படும் எம்.எஸ்.சி. மைக்ரோ பயாலஜி பட்டம் விலங்கியல் பட்டத்திற்கு இணையான பட்டமாக கருத முடியாது. 

பாரதிதாசன் பல்கலைகழகத்தில் எம்.எஸ்.சி. பயன்பாடு இயற்பியல் பட்டப்படிப்பை எம்.எஸ்.சி. இயற்பியல் பட்டத்திற்கு இணையாக கருத முடியாது.   திருச்சி ஜோசப்கல்லூரியில் நடத்தப்படும் எம்.எஸ்.சி. புள்ளியல் மற்றும் தகவலியல் பட்டம், எம்.எஸ்.சி. கணிதத்திற்கு இணையாக கருத முடியாது. 

 

பாரதிதாசன் பல்கலைகழகத்தில் வழங்கப்படும் பி.எஸ்.சி., தகவல் தொழில்நுட்பம், பி.எஸ்.சி., மென்பொருள் மேம்பாடு ஆகிய பட்டங்களும் பி.எஸ்.சி. கம்பியூட்டர் சயின்ஸ் பட்டத்திற்கு இணையாக ஏற்றுக்கொள்ள முடியாது.

எம்.எஸ்.சி. உயிர் அறிவியல் ஒருங்கிணைந்த பாடத்திட்டத்தை எம்.எஸ்.சி. விலங்கியல் பட்டத்திற்கு இணையாக ஏற்றுக்கொள்ள முடியாது. 

எம்.எஸ்.சி. எலக்ட்ரானிக்ஸ் பட்டம், எம்.எஸ்.சி. இயற்பியல் பட்டத்திற்கு இணையாக ஏற்க முடியாது. 

 

அண்ணாமலை பல்கலைகழகத்தில் நடத்தப்படும் பி.பி.ஏ.இரட்டை பட்டம், எம்.பி.ஏ. வணிக மேலாண்மை, சர்வேதேச வணிகம், மின்னணு வணிகம், மனிதவள மேலாண்மை, உலகளாவிய மேலாண்மை, ஆகிய பாடங்களை தேர்வாணயத்தின் எம்.பி.ஏ. பட்டத்திற்கு இணையாக கருத முடியாது. 

பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ், பி.எஸ்.சி கணிதம் ( நான்கு ஆண்டுகள் இரட்டை பட்டபடிப்பு ) பட்டத்தை பி.எஸ்.சி. கணிதம் பட்டத்திற்கு இணையாக கருத முடியாது. இதே அண்ணாமலை பல்கலைகழகத்தில் உள்ள பல இரட்டை பட்டங்களும் தேர்வாணயத்தால் கல்வி தகுதியாக ஏற்க முடியாது என்று தெரிவித்துள்ளது. 

 

இந்த குறிப்பிட்ட பட்டங்களை படித்து இதை சார்ந்த பட்டபடிப்பு என்று சொல்லி அரசு தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் தேர்வுகளில் பங்கேற்க முடியாது என்று அறிவித்துள்ளது. 

சார்ந்த செய்திகள்

Next Story

டி.என்.பி.எஸ்.சி தேர்வர்கள் கவனத்திற்கு; வெளியான முக்கிய அறிவிப்பு

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Important announcement on Attention TNPSC Candidates

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) மூலம் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த நிலையில், டி.என்.பி.எஸ்.சி குரூப்-1, குரூப்-2, குரூப்-4 உள்ளிட்ட தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுகளுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘6,244 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு வரும் ஜூன் 9ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. அதே போல், 90 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-1 தேர்வு ஜூலை 13ஆம் தேதி நடைபெறும். 29 பணியிடங்களுக்கான குரூப் 1-B மற்றும் குரூப் 1-C தேர்வு ஜூலை 12ஆம் தேதி நடைபெறும். 

2,030 காலி பணி இடங்களுக்கான குரூப்-2, குரூப்- 2A தேர்வு வரும் செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெறும். அதே போல், டிப்ளமோ/ ஐடிஐ அளவில் 730 பணியிடங்களுக்கான தொழில்நுட்பப்பிரிவு தேர்வுகள் வரும் நவம்பர் 17ஆம் தேதி நடைபெறும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர பிற அரசு தேர்வுகளுக்கான தேதிகளையும் டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது. மேலும், டி.என்.பி.எஸ்.சி.யின் அனைத்து தேர்வுகளுக்கும் தமிழ் தகுதித் தேர்வு கட்டாயம் எனக் கூறப்பட்டுள்ளது. 

Next Story

‘அரசுப் பணிக்கு 394 பேர் தேர்வு’ - டி.என்.பி.எஸ்.சி.  அறிவிப்பு!

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
394 Candidates Selected for Govt Jobs says tnpsc

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) மூலம் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில், பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப 394 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் ச. கோபால சுந்தர ராஜ் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் கடந்த 16.02.2024 முதல் 07.03.2024 வரையிலான காலத்தில் இளநிலை வரைதொழில் அலுவலர் (நெடுஞ்சாலைத் துறை) பதவிக்கு 219 நபர்களும், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - II (தொகுதி- II) பணிகளில் அடங்கிய இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், உதவி ஆய்வாளர், சார்பதிவாளர் நிலை - II, சிறப்பு உதவியாளர், தனிப் பிரிவு உதவியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு 112 நபர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இளநிலை அறிவியல் அலுவலர் (தடயவியல் துறை) பதவிக்கு 29 நபர்களும் மற்றும் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப மொத்தம் 394 நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.