டி.என்.பி.எஸ்சி. குரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பாக நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த இடைத்தரகர் சி.பி.ஐ.டி. போலீசாரிடம் சிக்கினார். இந்த விவகாரத்தில் டி.என்.பி.எஸ்சி. அதிகாரிகள் உள்ளிட்ட பலருக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-4 தேர்வில் கீழக்கரை, ராமேஸ்வரம் மையங்களில் முறைகேடு நடத்திருப்பது தெரியவந்தது.

tnpsc intermediary in investigation!

Advertisment

Advertisment

இந்த மையங்களில் வெவ்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் தேர்வு எழுதியதும், முதல் 100 இடங்களை பிடித்த பலரும் இந்த இரு மையங்களிலும் தேர்வு எழுதியதும் வெளியேறியது. இதன் மூலம் டி.என்.பி.எஸ்சி. குரூப்-4 தேர்வில் முறைகேடு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகேயுள்ள விஜயாபதியைச் சேர்ந்த ஐயப்பன் என்பவரை கடந்த 4 நாட்களுக்கு முன்பு சென்னையைச் சேர்ந்த சி.பி.ஐ.டி.அதிகாரிகள் விசாரித்துள்ளனர். அவருக்கு குரூப்-4 தேர்வு முறைகேட்டில் தொடர்பிருப்பது தெரியவந்ததை அடுத்து நேற்று சென்னை சி.பி.சி.ஐ.டி. போலீசார் அவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

இவருக்கும் டி.என்.பி.எஸ்.சி தேர்வில் முறைகேடுக்கும் தொடர்பு ஏற்பட்டது எப்படி என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.