Skip to main content

ஒரே சமூகத்தில் அதிக பேர் தேர்ச்சியா? குரூப் 4 தேர்வில் நடந்த அதிர்ச்சி சம்பவம்... வெளிவராத தகவல்!

Published on 17/02/2020 | Edited on 17/02/2020

கிணறு தோண்ட பூதம் கிளம்பியதுபோல், டி.என்.பி.எஸ்.சி. தேர்வு விவகாரத்தில் ஒன்றன்பின் ஒன்றாக முறைகேடுகள் வெளிப்பட்டு வருகின்றன. முறை கேடுகளை விரிவாகவே நக்கீரனில் வெளிப்படுத்தியதுடன், "கண்காணிப்பில் சங்கரன்கோவில்' என்று அப்போதே குறிப்பிட்டிருந்தோம். சி.பி.சி.ஐ.டி.யின் வசம் சிக்கிய சித்தாண்டி, க்ரைம் பிராஞ்சைத் திசைதிருப்பும் வகையில் சில தகவல்களை மட்டும் சொல்லிவிட்டு, இவ்விஷயத்தில் தொடர்புடைய தன் உறவுகள், நெருக்கமானவர்களைத் தப்பவைக்கிற வகையில் மறைக்கிறாராம். அவர் வாய்திறக்காமல் இவ்விஷயத்தில் தொடர்புடைய பெரும்புள்ளிகள் சிக்கமாட்டார்கள் என்கிறார்கள் இவ்விவகாரத்தைக் கண்காணிப்பவர்கள்.

 

admk



நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகிலுள்ள விஜயாபதியைச் சேர்ந்த ஐயப்பன் என்பவரை வளைத்துக் கொண்டு போனது சி.பி.சி.ஐ.டி. இவர் 10-ஆம் வகுப்பு படித்துவிட்டு குரூப் 4 தேர்வில் ஏஜெண்ட்கள் மூலம் முதலிடத்தில் தேறி வி.ஏ.ஓ. பணிக்கு செலக்டானவர். தற்போது அதே ஊரைச் சேர்ந்த சுயம்புராஜன் என்பவர் சித்தாண்டி மூலம் ஜெயக்குமாருக்கு 7 லட்சம் கொடுத்து தேர்வாகி திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையின் புன்னப்பாக்கம் வி.ஏ.ஓ.வாகப் பணியிலிருந்தது தெரியவர, அவரையும் தங்கள் கஸ்டடிக்குக் கொண்டு வந்திருக்கிறது சி.பி. சி.ஐ.டி. இந்தத் தகவலை மட்டும் விசாரணையில் தெரிவித்த சித்தாண்டி, அதே ரூட்டில் குரூப் 4 எழுதி போலீஸ் பணியி லிருக்கும் அவரது சகோ தரன், அடுத்து வருவாய்த் துறையிலிருக்கும் அவரது மனைவி பற்றி வாய் திறக்கவில்லையாம். ஆனால் சி.பி.சி.ஐ.டி. யினர் சுயம்புராஜனின் அண்ணனை விசாரித்த நேரத்தில் தன் மனைவியே பணம் கொடுத்ததாகத் தெரிவித் திருக்கிறாராம். அதனால் அவரது மனைவியையும் விசாரிக்கும் திட்டத்திலிருக்கிறது சி.பி.சி.ஐ.டி.

அதேசமயம் இந்தக் குடும்பத்தாரின் உறவினர் ஒருவரும் இதே வழியில் தேர்வாகி வருவாய்த் துறையிலிருப்பதையும் கிளறி யிருக்கிறது சி.பி.சி.ஐ.டி. இதில், சுயம்புராஜனின் சகோதரனும், சித் தாண்டியும் ஒரே பேட்ஜ் மேட்டாம். அதனாலேயே சித் தாண்டி, மோசடிகள் விஸ்வரூபமெடுத்து விடுமோ என்ற கோணத் தில் விஷயங்களை மறைப்பதாகவும் குறிப் பிடுகிறார்கள். இது ஒரு பக்கமென்றால், கடந்த வாரம் லோக்கல் போலீசுக்கும் தெரியாமல் சங்கரன்கோவில் வட்டாரத்தை நான்கு நாட்களாக அலசியிருக்கிறது சி.பி. சி.ஐ.டி. வடக்குப் புதூர், வீரிருப்பு, சேர்ந்தமரம், பொய்கைமேடு, நவநீதகிருஷ்ணாபுரம் மற்றும் புளியங்குடி பகுதிகளில் இந்த முறைகேட்டின் மூலம், தேர்வான வர்கள் பற்றி ரகசிய மாக விசாரித்திருக்கிறது.

சித்தாண்டி சமுதாயத்தைச் சேர்ந் தவர்களே இந்தப் பகுதிகளில் மெஜா ரிட்டியாக இருக்கிறார்கள். கிருஷ்ணா புரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் மற் றும் உறவினர் ஒருவர் டி.என்.பி.எஸ்.சி. மூலம் தேர்வாகி அரசுப் பணியிலிருப்பதையும், லிஸ்ட் எடுத்திருக்கிறது சி.பி.சி.ஐ.டி. தங்க ளின் லிஸ்ட்டிலிருப்பவர்கள் பற்றிய விபரங்களையும் சேகரித்துச் சென்றிருக்கிறதாம். அனுமனின் வாலுக்குப் போட்டியாக நீளும் லிஸ்டின் நீளம் பார்த்து சி.பி. சி.ஐ.டி.யே திகைத்துப் போயிருக்கிறதாம். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

18 மாவோயிஸ்டுகள் பலி; சத்தீஸ்கரில் பரபரப்பு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
nn

சத்தீஸ்கர் மாநிலத்தில் 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சத்தீஸ்கர் மாநிலம் கன்கர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் மொத்தமாக 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்தத் தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மூன்று வீரர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மொத்தமாக 18 மாவோயிஸ்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள், மெஷின் கன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒரே ஒரு எல்லை பாதுகாப்பு வீரரின் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இருப்பதாகவும் ஆனால் உயிருக்கு எந்தவிதமான சேதம் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நேரத்திற்கு முன்பாக நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் 18 மாவோயிஸ்டுகள் கொலை செய்யப்பட்டிருப்பது முக்கிய சம்பவமாக பார்க்கப்படுகிறது.  நக்சலைட்டுகள் ஆதிக்கம்  அதிகம் இருக்கும் சத்தீஸ்கரில் இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.