தமிழ்நாட்டின் அரசு பணிகளுக்கான தேர்வுகளை நடந்தும் டிஎன்பிஎஸ்சி அணைப்பு கிராப் 2 தேர்வில் புதிய மாறுதல்களை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.

Advertisment

tnpsc

அதன்படி குரூப்-2 முதனிலைத் தேர்வில் தமிழக வரலாறு, மரபு போன்றவற்றுக்கு முக்கியத்துவம் தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குரூப்-2 பிரதான தேர்வில் இருந்த ஒரு தாளானது இரண்டாக பிரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு தாள்களுள், முதல் தாளில் 100க்கு 25 மதிப்பெண் பெற்றால் மட்டுமே 2வது தாள் திருத்தப்படும். முதல் தாள் என்பது இரண்டாவது தாளை நிறுத்துவதற்கான அளவீடாகவே கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பணி நியமனத்திற்கு 2வது தாள் மதிப்பெண்களே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.