Skip to main content

TNPSC குரூப்-1 தேர்வு எழுதுவதில் சிக்கல்! தேர்வர்களின் கோரிக்கைக்குத் தேர்வாணையம் செவிசாய்க்குமா?

Published on 26/12/2020 | Edited on 26/12/2020

 

tnpsc

 

இந்த ஆண்டு கடந்த ஏப்ரல் 5ஆம் தேதி நடப்பதாக இருந்த குரூப்-1 தேர்வு, கரோனா ஊரடங்கு காரணமாக மறுதேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டது. தற்போது கரோனா பெருந்தொற்று கட்டுக்குள் வந்ததால், அடுத்த ஆண்டு (2021) ஜனவரி 3ஆம் தேதி 856 மையங்களில் குரூப் -1 தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்தச் சூழலில் எந்தவித முன் அறிவிப்பும் இன்றி, தேர்வர்களின் ஒருமுறைப் பதிவு (one time registration) ஐடியுடன் தங்களது ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே ஹால் டிக்கெட் http://tnpsc.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்ய முடியும் என்று அரசுப் பணியாளர் தேர்வாணையம் அண்மையில் அறிவித்தது.

 

இதனால், தேர்வர்களுக்கு உடனடியாக ஆதார் எண்ணை இணைப்பதிலும் ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்வதிலும் மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது.

 

ஏனெனில், TNPSC ஒருமுறைப் பதிவுடன் (One Time Registration) ஆதார் எண்ணை இணைக்க  முயலும்  போது, பல சிக்கல்களைச் சந்திக்க நேரிடுகிறது.


 
1) இங்கே நிறையத் தேர்வர்களின் ஆதார் எண்ணுடன் மொபைல் எண் இணைக்கப்படவில்லை அல்லது ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் தற்போது அவர்களிடம் இல்லை. எனவே, அவர்கள் ஆதார் எண்ணுடன் புதிய மொபைல் எண்ணை இணைக்கச் செல்லும் போது, ஒரு சில தேர்வர்களின் மொபைல் எண் மூன்று நாட்களில் இணைகிறது.

 

ஆனால், ஒரு சிலருக்கு 'பயோமெட்ரிக் அப்டேஷன் ஃபெயில்' என்னும் பிழை (error) காரணமாக தங்களது எண்களை அப்டேட் செய்ய முடியவில்லை என்று வருத்தம் தெரிவித்துள்ளனர். இன்னும், சிலருக்கு இந்தப் பிழை (error) நேரிடாவிடினும், தங்களது எண்ணைப் பதிவு (update) செய்ய 2, 3 நாட்களுக்கு மேல் ஆகுவதாகத் தெரிவிக்கின்றனர்.

 

2) ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட தேர்வர்களின் பலரது மொபைல்களுக்கு (OTP) நம்பர் வருவதே இல்லை என்ற குறைபாடும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அவர்களாலும் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்ய இயலாத நிலை உள்ளது. இதனால் தேர்வுக்கு வருடக்கணக்கில் உழைத்தும், தேர்வை எழுத முடியாமல் போய்விடுமோ என்ற அச்சத்தை உணர்வதாகக் கவலை தெரிவித்துள்ளனர்.

 

3) பல தொழில்நுட்பப் பிழையினை சந்திப்பதாகத் தேர்வர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

 

சிலருக்கு, OTR காலாவதி ஆகிவிட்டது. அதனை அவர்கள் புதுப்பிப்பதற்காக கட்டணம் செலுத்தியபோது, Payment Success என்ற நிலையை online Payment செய்யும் போது அடையவில்லை. இதன் காரணமாக, ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்ய இயலாத நிலை உள்ளது.

 

மேலும், ஓஎம்ஆர் (OMR) விடைத்தாளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது தேர்வர்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

ஒரு வருடமாக கரோனா பெருந்தொற்று காரணமாக தேர்வு இல்லாத சூழ்நிலையில், ஒரு வருடத்திற்குப் பின் தேர்வு எழுதும் ஆவலில் இருந்தவர்கள், தற்போது தேர்வை எழுத முடியாமல் போய்விடுமோ என்ற மனக்கவலையில் உள்ளனர். இதனால், ஏற்பட்ட மன உளைச்சலால் தேர்வு தயாரிப்புப் பணிகளில் கவனத்தோடு ஈடுபட முடியவில்லை.

 

TNPSC தேர்வாணையம், தேர்வர்களுக்குப் பயன்படும் வகையில் சரியான முறையில் தேர்வுகளை எதிர்கொள்ள சில அறிவுரைகளையும், செயல்முறை பதிவு வீடியோக்களையும் வெளியிட்டுள்ளது. இவை, மிகுந்த நம்பிக்கை அளிக்கும் விதமாக இருந்தாலும் கூட, இந்த ஒருமுறை மட்டும் விண்ணப்பித்த அனைவரும் தேர்வெழுத TNPSC தேர்வாணையம் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பது பெரும்பாலானோரின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

 

ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அளவு குறைவாக இருப்பதாலும் தொழில்நுட்பப் பிரச்சனைகள் ஏற்படுவதாலும், இந்தமுறை மட்டும், ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே ஹால் டிக்கெட் என்ற நிபந்தனையைத் தளர்த்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர் தேர்வு எழுதுபவர்கள். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“வாக்காளர்கள் கவனத்திற்கு...” - சத்யபிரதா சாகு முக்கிய தகவல்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
“Attention Voters...” - Satyapratha Sahu Important Information

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “தமிழ்நாட்டில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 6.32 கோடி ஆகும். இதில் முதல் தலைமுறை வாக்காளர்களின் எண்ணிக்கை 10.92 லட்சம் ஆகும். 80 வயதிற்கு மேல் உள்ள வாக்காளர்கள் 6 லட்சத்து 14 ஆயிரத்து 2 பேர் ஆவர். ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 3.06 கோடியும், பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 3.17 கோடியும், திருநர் வாக்காளர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 467 ஆகும்.

தமிழ்நாட்டில் மொத்தம் 68 ஆயிரத்து 321 வாக்கு சாவடி மையங்கள் உள்ளன. மொத்த வாக்குச்சாவடிகளில் 44 ஆயிரத்து 800 வாக்குச்சாவடிகள் (65 சதவிகிதம்) வெப் காஸ்டிங் முறையில் நேரடியாக தேர்தல் ஆணையத்தின் மூலம் கண்காணிக்கப்பட உள்ளன. 3.32 லட்சம் பணியாளர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ளனர். தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட காவலர்களும், கேரளா மற்றும் ஆந்திராவை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்களும் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 

“Attention Voters...” - Satyapratha Sahu Important Information

காலை 7 மணி முதல் மாலை 6 வரை வாக்குப்பதிவு நடைபெறும். மாலை 6 மணியிலிருந்து வரிசையில் நிற்பவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு அனைவரும் வாக்களிக்க ஏதுவாக நடவடிக்கை எடுக்கப்படும். அதாவது மாலை 6 மணிக்குள் வரிசையில் வந்து நிற்பவர்கள் வாக்களிக்கலாம். கடைசி வாக்காளர் வாக்களிக்கும் வரை முழுமையாக வாய்ப்பு வழங்கப்படும். தமிழகத்தின் 39 தொகுதிகளில் போட்டியிடும் மொத்த வேட்பாளர்கள் எண்ணிக்கை 950 ஆகும். இதில் ஆண் வேட்பாளர்கள் 874 பேரும், பெண் வேட்பாளர்கள் 76 பேரும் ஆவர்.

வாக்குச்சாவடி வளாகத்திற்குள் செல்போன் எடுத்துச் செல்லலாம். ஆனால் வாக்குச்சாவடிக்கு உள்ளே செல்போன் அனுமதிக்கப்படாது. வாக்காளர் அடையாள அட்டை இல்லாவிட்டாலும் ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், வங்கி கணக்கு புத்தகம், மருத்துவ காப்பீட்டு அட்டை, பான் கார்டு, பாஸ்போர்ட் உள்ளிட்ட 13 வகையான அரசு ஆவணங்களை பயன்படுத்தி வாக்களிக்கலாம். மாற்றுத்திறனாளிகள், முதியோர் மற்றும் கர்ப்பிணிகள் வாக்களிக்க ஏதுவாக வசதிகள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி மாற்றுத்திறனாளிகள், முதியோர், கர்ப்பிணிகள் உள்ளிட்டோர் 1950 என்ற எண்ணுக்கு அழைத்தால் வாக்களிக்க இலவசமாக வாகனம் அனுப்பி வைக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

முதல்கட்ட வாக்குப்பதிவு; ஏற்பாடுகள் தீவிரம்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
First Phase Voting; Preparations are intense

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. அதாவது தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாளில் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கின. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

முதற்கட்ட தேர்தலில் தமிழகத்தின் 950 வேட்பாளர்கள் உள்பட 1,625 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த முதல் கட்ட தேர்தலில் மத்திய அமைச்சர்களான நிதின் கட்கரி, கிரன் ரிஜிஜு, எல். முருகன், ஜிதேந்திர சிங், சர்வானந்த் சோனோவால், அர்ஜுன்ராம் மேக்வால் மற்றும் சஞ்சீவ் பல்யான் என 8 பேர் போட்டியில் உள்ளனர். தெலங்கானாவின் முன்னாள் ஆளுநரும், புதுச்சேரியின் பொறுப்பு துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் களத்தில் உள்ளார். மேலும் திரிபுரா முன்னாள் முதல்வர் பிப்லப் குமார் தேவ், அருணாசலப் பிரதேச முன்னாள் முதல்வர் நபம் துகி, தமிழகத்தின் முன்னாள முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

அதே சமயம் முதற்கட்ட தேர்தலுடன் தமிழகத்தின் விளவங்கோடு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் நாளை நடைபெறுகிறது. இதே போன்று திரிபுரா மாநிலம் ராம்நகர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலும் நாளை நடைபெறவுள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் 39 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் 68 ஆயிரத்து 320 வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் உள்ளன. தமிழகத்தில் பதற்றமான 45 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் வெப்கேமரா மூலம் தொடர்ந்து கண்காணிக்க தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மிகவும் பதற்றமான 8 ஆயிரத்து 50 வாக்குச்சாவடிகளில் நவீன ஆயுதங்களுடன் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இத்தகைய சூழலில் தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பும் பணியும் தீவிரமடைந்துள்ளது.