Skip to main content

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு; தமிழாசிரியர் செல்வேந்திரன் புரோக்கராக மாறியது எப்படி?

Published on 16/02/2020 | Edited on 16/02/2020

டிஎன்பிஎஸ்சி குரூப் 4, குரூப் 2, விஏஓ, தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது சிபிசிஐடி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேடாக தேர்ச்சி பெற்றதாக திருச்சி நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் உதவியாளராகப் பணிபுரிந்து வந்த விமல்குமார் என்பவரை முசிறி அடுத்த மங்கலம் கிராமத்தில் கைது செய்தனர். இவர் கைது செய்யப்பட்ட அடுத்த சில நாளிலே சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் செல்வேந்திரன் என்பவர் சரணடைந்தார்.

TNPSC EXAM TRICHY GOVERNMENT STAFF CBCID POLICE

நீதிமன்ற காவல் சிறையில் அடைக்கப்பட்ட செல்வேந்திரனை சிபிசிஐடி போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளனர். இந்தநிலையில் செல்வேந்திரன் பற்றிய சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. செல்வேந்திரன் திருச்சியை அடுத்த துறையூர் அருகே உள்ள மூவானூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரியர் பணிபுரிந்து வருகிறார்.
 

நெடுஞ்சாலைத் துறை ஊழியர் விமல்குமாரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து விசாரித்தபோது... துறையூர் தமிழாசிரியர் செல்வேந்திரனிடம் ரூபாய் 7 லட்சம் கொடுத்து அலுவலக உதவியாளராக வேலைக்கு சேர்ந்தேன் என வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

டிஎன்பிஎஸ்சி முறைகேடு வழக்கில் முக்கிய குற்றவாளியான ஜெயக்குமாரிடம் தமிழாசிரியர் செல்வேந்திரன் மிக நெருக்கமான தொடர்பில் இருந்துள்ளார். செல்வேந்திரன் தன் மனைவிக்கும் பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்தில் வேலை வாங்கிக் கொடுப்பதாக நம்பிக்கை கொடுத்ததால் செல்வேந்திரன் பலரிடம் அரசு வேலைக்கு பணம் வாங்கும் புரோக்கராக மாறியிருக்கிறார்.

தமிழாசிரியர் செல்வேந்திரனை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தால் இன்னும் இன்னும் பல கருப்பு ஆடுகள் சிக்க வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

காலிப் பணியிடங்களை நிரப்ப 1,253 பேர் தேர்வு; டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு

Published on 16/02/2024 | Edited on 16/02/2024
TNPSC Notification on 1,253 people selected to fill vacancies;

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) மூலம் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில், காலிப் பணியிடங்களை நிரப்ப 1,253 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘டி.என்.பி.எஸ்.சி மூலம் பல்வேறு துறைகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப 1,253 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். டி.என்.பி.எஸ்.சி மூலம் கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரையிலான காலத்தில் உரிமையியல் நீதிபதி பதவிக்கு 237 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும், உதவி நிலவியலாளர் பதவிக்கு 40 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய உதவிப் பொறியாளர் (கட்டடவியல்) உள்ளிட்ட பதவிக்கு 752 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். உதவி புள்ளியியல் ஆய்வாளர் பதவிக்கு 190 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்’ என்று தெரிவித்துள்ளது.

Next Story

‘குரூப்-2 தேர்வர்கள் கவனத்திற்கு’ - டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Published on 03/02/2024 | Edited on 03/02/2024
TNPSC Important Notification for Group-II Candidates

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, 2ஏ பதவிகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்றது. இந்த முதல்நிலைத் தேர்வில் 57,641 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். இவர்களுக்கான முதன்மைத் தேர்வு கடந்த ஆண்டு பிப்ரவரி 25 ஆம் தேதி நடந்தது. இதையடுத்து, இந்தத் தேர்வு முடிந்த சில மாதங்களில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், அதன் முடிவுகள் வெளியிடப்படாமலேயே இருந்தது.

இதனையடுத்து, குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ முதன்மைத் தேர்வு முடிவுகள் ஜனவரி 11, 2024 அன்று டி.என்.பி.எஸ்.பி. வெளியிட்டது. சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்ட 327 பட்டதாரிகளின் பட்டியலை டிஎன்பிஎஸ்சி நேற்று (02-02-24) வெளியிட்டது. 

இந்த நிலையில், பட்டியலில் இடம்பெற்றுள்ள 327 பேருக்கான நேர்முகத் தேர்வுக்கான தேதியை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘குரூப்-2 பணிகளுக்கான முதல்கட்ட நேர்முகத் தேர்வு வரும் பிப்ரவரி 12 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான கலந்தாய்வு 21.02.2024 அன்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான தகவல்கள் தேர்வர்களுக்கு எஸ்.எம்.எஸ் மற்றும் மின்னஞ்சல் மூலம் மட்டுமே தெரிவிக்கப்படும். தபால் மூலம் அனுப்பப்படாது’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.