Advertisment

கரோனா முன்னெச்சரிக்கை : மூடப்பட்ட டவர் பார்க்..! ஆய்வுக்குள்ளான தி.நகர் வீதி.! (படங்கள்)

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

சீனாவில் உருவான கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. இதுவரை உலகம் முழுவதும் 5000க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் பாதிப்பால் இறந்துள்ளனர். அனைத்து நாடுகளும் கரோனா வைரஸை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகின்றன. இந்தியாவிலும் கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள், தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன.

Advertisment

தமிழகத்திலும் அனைத்து கல்வி நிறுவனங்கள், அங்கன்வாடி மையங்கள், திரையரங்குகள், வணிக வளாகங்கள், அனைத்தையும் மார்ச் 31 வரை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ள நிலையில் சென்னையின் முக்கிய சுற்றுலா இடங்களும், வணிக மையங்களுமான அண்ணா நகர் டவர் பார்க் மற்றும் தியாகராயர் நகரின் (தி.நகர்) கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் மனித நடமாட்டம் குறைந்து வெறிச்சோடிக் காணப்படுகின்றன. மேலும், தி.நகரின் முக்கியக்கடைவீதிகளில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை தமிழக வருவாய் துறை நிர்வாக ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார்.

t.nagar corona virus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe