Skip to main content

பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர் சி.வி.கணேசன்

Published on 28/05/2022 | Edited on 28/05/2022

 

tn minister ganesan started various projects

 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான சி.வி.கணேசன் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி பள்ளி கட்டிட திறப்பு விழா நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். பெண்ணாடத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற பழமையான கோவில் பிரளயகாலேஸ்வரர், ஆமோதனாம்பாள் ஆலயம் இவ்வாலய இறைவனையும் இறைவியையும் வழிபடுவதற்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து தரிசித்து செல்கிறார்கள். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.

 

மேலும் 63 நாயன்மார்களில் கலிக்கம்ப நாயனார், மறைஞானசம்பந்தர் ஆகிய இருவரும் இந்த ஊரில் பிறந்து வாழ்ந்தவர்கள். இறைவனுக்கு பிரளயகாலேஸ்வரர் என பெயர் வருவதற்கு காரணம், ஒரு முறை இந்த ஊருக்கு தென்பகுதியில் செல்லும் வெள்ளாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஊருக்குள் புகுந்தது மக்கள் தங்களை காப்பாற்றுமாறு ஆலயத்திற்கு ஓடி வந்து இறைவனிடம் கையேந்தி வேண்டி நின்றனர். அப்போது இறைவன் நந்தி பெருமானுக்கு ஊருக்குள் வரும் வெள்ளத்தை முழுவதையும் குடித்து விடும்படி ஆணையிட்டார்.  இதையடுத்து நந்தி-பெருமான் சிவபெருமானை நோக்கி மேற்கு முகமாக இருந்தவர், கிழக்கு நோக்கித் திரும்பி பெருகி வந்த அந்த வெள்ள நீரை உறிஞ்சினாராம். அந்த பிரளயத்தை காத்ததா ஆலய இறைவனுக்கு பிரளயகாலேஸ்வரர் என்ற பெயர் வந்தது.

 

மேலும் இந்த ஆலயதிற்கு "கை வழங்கீயஈசன்" என்ற பெயரும் உண்டு. இதற்கு காரணம் கை, கால் உபாதை உள்ளவர்கள் செயல் இழந்தவர்கள் இவ்வாலயம் வந்து சிறப்பு வழிபாடு செய்பவர்களுக்கு நிவர்த்தியாகிறது என்ற பலத்த நம்பிக்கை உள்ளது. இக்கோயில் கடந்த இரண்டாயிரத்து ஆறாம் ஆண்டு புனரமைப்பு செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதன் பிறகு கடந்த 16 ஆண்டுகளாக குடமுழுக்கு நடத்தப்படவில்லை. இதுகுறித்து சிவனடியார்கள் இப்பகுதி பக்தி மார்க்கத்தில் உள்ள பொதுமக்கள் ஆகியோர் அறநிலையத்துறைக்கு பலமுறை விண்ணப்பித்தனர். கோயில் புனரமைப்பு செய்து மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த கோரி இதனடிப்படையில் தொல்லியல் துறையினர் அனுமதியுடன் அறநிலையத்துறை கோயிலை திருப்பணி செய்து கும்பாபிஷேகம் நடத்துவதற்கு அனுமதி வழங்கியுள்ளது.

 

இதற்காக கோவில் நிதியாக அறநிலையத்துறை 39 லட்சத்து 53 ஆயிரம் ரூபாய் மற்றும் உபயதாரர்கள் 43 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 83 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. திருப்பணிக்கான பாலாலய பூஜை நேற்று(27.5.2022) காலை கோவில் வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை கடலூர் மாவட்ட இணை ஆணையர் அசோக்குமார் தலைமையில் பேரூராட்சி சேர்மன் அமுத லட்சுமி ஆற்றலரசு, உதவி ஆணையர் சரவணன், விருத்தாசலம் கோட்டாட்சியர் ராம்குமார், கோயில் செயல் அலுவலர் சரண்யா ஆகியோர் முன்னிலையில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சரும் திட்டக்குடி தொகுதி எம்எல்ஏவுமான கணேசன் மற்றும் தருமபுர ஆதீனம் சட்டநாத தம்பிரான் சாமிகள் ஆகியோர் ஆலய பூஜை செய்து கோயில் திருப்பணிக்கான அடிக்கல் நாட்டி வைத்தனர்.இதில் ஏராளமான பக்தர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

 

tn minister ganesan started various projects

 

இதையடுத்து திட்டக்குடி நகராட்சியில் மாவட்ட கனிமவள அறக்கட்டளை நிதி திட்டத்தின் கீழ் அங்கு ஏற்கனவே செயல்பட்டு வந்த பள்ளி கட்டிடம் பழுதடைந்த நிலையில் அவற்றை அப்புறப்படுத்தி விட்டு புதிய கட்டிடம் கட்டுவதற்கு ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வந்தன. கட்டிட பணிகள் முடிக்கப்பட்ட நிலையில் மாணவ மாணவிகள் பள்ளியில் அமர்ந்து படித்து பயன்பெறும் வகையில் அந்த புதிய கட்டிடத்தையும் அமைச்சர், ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அடுத்து கூத்தப்பன் குடிக்காடு வசிஸ்டபுரம்., பகுதிகளில் புதிதாக கட்டப்பட்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டிகளையும் திறந்துவைத்தார், இதில் திட்டக்குடி தாசில்தார் கார்த்திக், சமூகநல வட்டாட்சியர் ரவிச்சந்திரன், விருத்தாசலம் மாவட்டக் கல்வி அலுவலர் சுகப்பிரியா, வட்டார கல்வி அலுவலர் ராஜேஸ்வரி, பள்ளி தலைமை ஆசிரியை அமுதா, சிவராமன் நகராட்சி தலைவர் வெண்ணிலா, கோதண்டம் மங்களூர் ஒன்றிய பெருந்தலைவர் சுகுணா சங்கர், திட்டக்குடி நகராட்சி கவுன்சிலர் செந்தில்குமார் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

“தமிழகத்தில் நீடித்த வளர்ச்சியை தி.மு.க அரசால் மட்டுமே வழங்க முடியும்” - மல்லிகார்ஜுன கார்கே பேச்சு

Published on 15/04/2024 | Edited on 16/04/2024
“ Mallikarjun Kharge speech Only a DMK government can deliver sustainable development in Tamil Nadu

கடலூர் மாவட்டம் நெய்வேலியில், கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் எம்.கே. விஷ்ணு பிரசாத் கை சினத்தில் போட்டியிடுகிறார். அதேபோல் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பானை சின்னத்தில் போட்டியிடுகிறார். இவர்களுக்கு ஆதரவு திரட்டும் வகையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொண்டு கடலூர் தொகுதியில் கை சின்னத்தில் போட்டியிடும் விஷ்ணு பிரசாத்தையும், சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் பானை சின்னத்தில் போட்டியிடும் தொல். திருமாவளவனையும் இரு கரம் கோர்த்து பானை மற்றும் கை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து அவர் மக்கள் மத்தியில் பேசுகையில், “இந்திய கூட்டணியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தந்தை பெரியார், காமராஜர், கலைஞர் ஆகியோரின் நினைவுகளை இத்தருணத்தில் நினைவு கூற கடமைப்பட்டுள்ளோம். பாரதிய ஜனதா அரசு பல்வேறு வரிவிதிப்புகள் மூலம் ஏழை எளிய மக்களை வதைத்து வருகிறது. அதிலும் குறிப்பாக, தாழ்த்தப்பட்ட மக்கள், பிற்படுத்தப்பட்ட விவசாய பெருங்குடிகள் ஆகியோரின் நிலை மிகுந்த மோசமான நிலையில் உள்ளது. அவர் பிரதமர் ஆவதற்கு முன்பும், பிரதமர் ஆனதற்கு பின்பும் அடிக்கடி கூறி வருவது 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என்பதையும் ஒவ்வொரு குடும்பத்தாரின் வங்கி கணக்கில் 15 லட்சம் கருப்பு பணத்தை மாற்றி தருவேன் எனவும் வாக்குறுதி தந்தார். அதில் ஏதாவது ஒன்றை செய்துள்ளாரா?

காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சி அமைத்தவுடன் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும். இந்தப் பிரச்சாரக் கூட்டத்தில் நான் திடமாக கூறிக் கொள்வது என்னவென்றால் இரண்டு விஷயங்களை மட்டும் மக்கள் மன்றத்தில் கூற விரும்புகிறேன். ஒன்று இந்திய ஜனநாயகம் பாதுகாக்கப்படும், மற்றொன்று அரசியலமைப்பு சட்டம் பாதுகாக்கப்படும். நான் 53 ஆண்டு காலம் சட்டமன்ற உறுப்பினர், எம்.பி ராஜ்யசபா உறுப்பினர் எனப் பல்வேறு பதவிகளில் இருந்து வருகிறேன். ஆனால், இந்த ஆட்சியின் போதுதான் கவர்னர் என்ற பதவியின் செயல்பாடுகள் மிகுந்த கேள்விக்குரியதாக உருவாகியுள்ளது. அவர் பட்ஜெட் கூட்டத்தொடர், பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் போன்றவைகளில் எல்லை மீறுவதைக் காண முடிந்தது. 

“ Mallikarjun Kharge speech Only a DMK government can deliver sustainable development in Tamil Nadu

பாஜக அரசை எதிர்ப்பதில் தமிழக முதல்வர் மிக முக்கிய இடமாக உள்ளார். அதிலும் குறிப்பாக நீட் தேர்வு போன்றவற்ற எதிர்ப்பதில் மிக உறுதியாக உள்ளார். நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் தற்போது உள்ள சிஸ்டத்தை நிச்சயம் மாற்றுவோம். விவசாயிகள் இப்போது மிகுந்த மோசமான நிலையில் உள்ளனர். அவர்களின் வாழ்வாதாரம் சிறக்க, சிறப்பு நடவடிக்கை காங்கிரஸ் அரசு நிச்சயம் மேற்கொள்ளும். தமிழகத்தில் நீடித்த வளர்ச்சியை, தி.மு.க அரசால் மட்டுமே தர முடியும். பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து கொண்டிருக்கிறது. ஏன் விலை உயர்வு என்று கேட்டால் , மோடி அரசு குருடாயில் விலை உயர்வு என்கிறது. ஆனால், உலக அளவில் குரூடாயில் விலை குறைந்த போது பெட்ரோல் டீசல் விலையை குறைக்கவில்லை. இதனால் ஏழை எளிய மக்கள் விலைவாசி உயர்வால் அவதி அடைந்து வருகின்றனர்.

ஆயிரம் மோடி வந்தாலும் இந்திய ஜனநாயகத்தையும், அரசியல் சட்டத்தையும் ஒன்றும் அசைக்க முடியாது. இந்தியாவில் உள்ள பல்வேறு துறைகளில் உள்ள எஸ்.சி, எஸ்.டி பிற்பட்டோர் பிரிவினருக்கான காலியிடங்களை நிச்சயம் நிரப்புவோம். இதனால் சுமார் 30 லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்புப் பெறுவர் எனவே அனைவரும் கை சின்னத்திற்கும் பானை சின்னத்திற்கும் வாக்களித்து ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டும்” என்று பேசினார்.  

இந்தப் பொதுக்கூட்டத்தில் தமிழக தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன், காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, நெய்வேலி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சபா. ராஜேந்திரன், கடலூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன், காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி, மாநில செயலாளர் சந்திரசேகர், கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கோ.மாதவன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர்.