Skip to main content

“நா யாரு... என் பேக்ரவுண்ட் என்னன்னு தெரியுமா?” - ஆளுநரின் ஆலோசகர் அடாவடி

Published on 09/02/2023 | Edited on 09/02/2023

 

tn Governor rn ravi advisor involved in an argument with an Ola driver

 

குடி போதையில் ஓலா கார் டிரைவரை தாக்கியதாகக் கூறி தமிழக ஆளுநரின் ஊடக ஆலோசகர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் தனிப்பட்ட ஊடக ஆலோசகராக இருப்பவர் திருஞானசம்பந்தம். இவர் கடந்த 6 ஆம் தேதி இரவு சென்னை விமான நிலையத்திலிருந்து முகலிவாக்கம் வரை செல்ல ஓலா காரை புக் செய்துள்ளார். அப்போது விமான நிலையத்துக்கு வந்த காரில் ஏறி அமர்ந்த திருஞானசம்பந்தம், வரும் வழியில் இருந்த ஏடிஎம்-ல் நிறுத்தச் சொல்லியுள்ளார். அதன்பேரில் ஓட்டுநரும் காரை நிறுத்தியுள்ளார். பின்னர், வழியில் ஆங்காங்கே திடீர் திடீரென காரை நிறுத்துமாறு கேட்டுள்ளார். இதனால் அதிருப்தியடைந்த ஓட்டுநர், குறிப்பிட்ட நேரத்தில் இன்னொரு சவாரிக்கு செல்லவேண்டும்.. அதனால் எல்லா இடத்திலும் காரை நிறுத்த முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

 

இதனால் ஆத்திரமடைந்த திருஞானசம்பந்தம் ஓட்டுநரை தகாத வார்த்தையில் திட்டியதாகச் சொல்லப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றவே ஒருகட்டத்தில்  நந்தம்பாக்கம் ஹோட்டல் மவுண்ட் அருகே காரை நிறுத்திய ஓட்டுநர்., திருஞானசம்பந்தத்தை காரை விட்டு இறங்குமாறு கூறியுள்ளார். குடி போதையில் இருந்ததாகக் கூறப்படும் திருஞானசம்பந்தம், “நான் யாருன்னு தெரியுமா?” எனக் கூறி, மேலும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அப்பகுதியே பரபரப்புடன் காணப்பட்டது.

 

அப்போது, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார்... இருவரிடமும் விசாரணை நடத்தினர். விசாரணையில், காரில் வந்தது தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் தனிப்பட்ட ஊடக ஆலோசகரான திருஞானசம்பந்தம் என்பது தெரியவந்தது. இதனால் அதிருப்தியடைந்த போலீசார் அவரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதையடுத்து, திண்டிவனத்தை சேர்ந்த சம்பந்தப்பட்ட ஓலா டிரைவர், ஆளுநரின் ஊடக ஆலோசகர் மீது போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், “குடும்ப சூழ்நிலை காரணமாக நான் ஓலா கால் டாக்சியில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறேன். இந்த நிலையில் நேற்று இரவு சென்னை விமான நிலையம் முதல் போரூர் வரை செல்ல தனது வாகனத்தை திருஞானசம்பந்தம் என்பவர் முன்பதிவு செய்தார்.

 

பயணி ஏறியவுடன் இறங்கும் இடம் வரை நேரடியாக அழைத்து சென்று விடும் டிரிப்பைத்தான் அவர் தேர்வு செய்திருந்தார். பிறகு, காரில் பயணித்தபோது திருஞானசம்பந்தம் கிண்டி கத்திபாரா வந்தபோது ஏ.டி.எம் பக்கத்தில் 10 நிமிடம் காரை நிறுத்த சொன்னார். ஆனால், கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டார். கார் பயணிக்கத் தொடங்கியபோது மீண்டும் ஒரு இடத்தில் காரை நிறுத்தச் சொன்னார். எனது வேலைப் பளு காரணமாக அவர் அப்படி கூறியபோது வேறு வாகனத்தை பதிவு செய்து கொள்ளுங்கள் எனக் கூறினேன்.

 

அப்போது காரில் வந்த பயணி திருஞானசம்பந்தம், ‘உனக்கு அவ்வளவு திமிரா.. என் பேக்ரவுண்ட் என்னன்னு தெரியுமா? நான் யார்னு தெரியுமா?’ என்று மிரட்டினார். அப்போது எனது கன்னத்திலும் ஓங்கி அறைந்தார். அதை செல்போனில் பதிவு செய்தபோது செல்போனையும் தட்டிவிட்டார்.” எனக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.