Skip to main content

துபாயிலிருந்து மீட்கப்பட்ட தமிழக மீனவர்கள் - சொந்த ஊருக்கு அனுப்பிவைத்த அமைச்சர்கள்!  

Published on 21/02/2024 | Edited on 21/02/2024
TN fishermen rescued from Dubai will be sent to their native places

தமிழ்நாட்டு மீனவர்கள் மீன் பிடிப்பதற்காக எந்தப் பக்கம் சென்றாலும் பிரச்சனையில் சிக்கித் தவிப்பது வழக்கமாக நடக்கின்ற கொடுமையாகிவிட்டது. தமிழ்நாட்டிலிருந்து ஒப்பந்த அடிப்படையில் மீன் பிடிப்பதற்காக துபாய் சென்ற மீனவர்கள், சொந்த ஊருக்குத் திரும்பமுடியாமல் தவித்த நிலையில், தூதரகம் வாயிலாகத் தற்போது மீட்கப்பட்டுள்ளனர்.   

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் 9 பேர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் 2 பேர் துபாய் சென்று, அங்கு ஒப்பந்த அடிப்படையில் மீன் பிடிக்கும் பணியினைச் செய்துவந்தனர். இந்நிலையில், கடந்த 4 மாதங்களுக்குமுன் கன்னியாகுமரி மாவட்டத்தைச்  சேர்ந்த மீனவர் ஒருவருடைய தந்தை இறந்துவிட்டார். அதற்காக ஊருக்குச்  செல்லவேண்டும் என்று அவர் விடுமுறை கேட்டார். ஒப்பந்தகாரர் இதற்குச் சம்மதிக்காத நிலையில், மீனவர்களுக்கும் ஒப்பந்தகாரருக்குமிடையே  வாய்த்தகராறு மூண்டது.

இதனைத் தொடர்ந்து, முறையான சம்பளமோ, உணவோ வழங்கப்படாத  நிலையில், சொந்த ஊருக்குத் திரும்பும் முயற்சியை அனைத்து மீனவர்களும்  மேற்கொண்டனர். முன்பு நடந்த வாக்குவாதம் வழக்காக துபாயில் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், சொந்த ஊருக்கு மீனவர்கள் திரும்பவேண்டுமென்றால், பணத்தைச் செலுத்தினால்தான் அது முடியும்  எனக் கறாராக ஒப்பந்தகாரர் தெரிவித்துவிட்டார்.

அதனால் அம்மீனவர்கள் நீதிமன்றத்தையும், இந்திய தூதரகத்தையும் தொடர்புகொண்டு, தமிழக அதிகாரிகளின் உதவியுடன் தமிழ்நாட்டுக்குத் திரும்பியுள்ளனர். அவர்களை அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் மனோ தங்கராஜ் ஆகியோர் சென்னை விமான நிலையத்தில் வரவேற்று சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.  

சார்ந்த செய்திகள்

Next Story

துபாயில் வரலாறு காணாத கனமழை; விமானங்கள் ரத்து!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 Heavy rain in Dubai Canceled flights

துபாயில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. குறிப்பாகத் துபாயின் சர்வதேச விமான நிலையம் வெள்ளத்தில் சிக்கித் தத்தளித்து வருகிறது.

துபாய் உள்ளிட்ட ஐக்கிய அரபு நாடுகளில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத அளவிற்குக் கனமழை பொழிந்து வருகிறது. இதனால் துபாயின் முக்கிய நகர்ப் பகுதிகளில் வெள்ளம் தேங்கும் சூழ்ந்துள்ளது. பல இடங்களில் குடியிருப்புகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் மிதக்கின்றன. துபாயின் மிக உயர்ந்த கட்டிடமான புர்ஜ் கலிஃபா கட்டிடத்திற்குக் கீழ் மற்றும் அதன் அருகே உள்ள வணிக வளாகங்களைச் சுற்றிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இது தொடர்பான காட்சிகள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

அதே சமயம் சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையில் வெள்ளம் சூழ்ந்ததால் விமானத்தை இயக்கவும் மற்றும் விமானங்களைத் தரையிறக்கவும் முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அந்தவகையில் துபாய், ஷார்ஜா, குவைத் நகரங்களுக்கு சென்னையில் இருந்து செல்லும் 5 விமானங்களும், மறுமார்க்கத்தில் இருந்து சென்னைக்கு வர வேண்டிய 5 விமானங்களும் நேற்று (17.04.2024) ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் சென்னையில் இருந்து துபாய், குவைத் மற்றும் சார்ஜா செல்லும் 12 விமானங்கள் இரண்டாவது நாளாக இன்று (18.04.2024) ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர். 

Next Story

சிக்கிய புர்ஜ் கலிஃபா; மிதக்கும் 'துபாய்'

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
the trapped Burj Khalifa; Floating 'Dubai'

துபாயில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. குறிப்பாகத் துபாயின் சர்வதேச விமான நிலையம் வெள்ளத்தில் சிக்கித் தத்தளித்து வருகிறது.

கடந்த சில நாட்களாகவே துபாயில் வரலாறு காணாத அளவிற்குக் கன மழை பொழிந்து வருகிறது. இதனால் துபாயின் முக்கிய நகர்ப் பகுதிகளில் வெள்ளம் தேங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் குடியிருப்புகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் மிதக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. துபாயின் மிக உயர்ந்த கட்டிடமான புர்ஜ் கலிஃபா கட்டிடத்திற்குக் கீழ் மற்றும் அதன் அருகே உள்ள வணிக வளாகங்களைச் சுற்றிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இது தொடர்பான காட்சிகள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையில் வெள்ளம் சூழ்ந்ததால் விமானத்தை இயக்கவும் மற்றும் விமானங்களைத் தரையிறக்கவும் முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.