
திண்டுக்கல் மாவட்டத்தில் புதிய விரிவான சிற்றுந்து தொடக்கவிழா திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. விழாவிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் தலைமை தாங்கினார். வட்டார போக்குவரத்து அலுவலர் கண்ணன் வரவேற்றார். பழனி சட்டமன்ற உறுப்பினரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளருமான ஐ.பி.செந்தில்குமார், வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்தி ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கரூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி மற்றும் துணை மேயர் ராஜப்பா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

நிகழ்ச்சியில் 29 புதிய சிற்றுந்துகளை புதிய வழித்தடத்தில் கொடியசைத்துத் துவக்கி வைத்த ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பேசும்போது, “முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழகம் பெயர் பெற்றுள்ளது. கல்வி, மருத்துவ வசதி, சாலை வசதி, வேலை வாய்ப்பு வசதி உட்பட அனைத்து துறைகளிலும் தமிழகம் சாதனை படைத்து வருகிறது. ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக நான் பொறுப்பேற்ற பின்பு தமிழக முதல்வர் கிராமப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டம் மூலம் அனைத்து கிராமங்களுக்கும் தார்சாலை வசதி செய்து கொடுத்ததால் இன்று குக்கிராமங்களுக்கும் பேருந்து செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இன்று தொடங்கப்பட்டுள்ள புதிய சிற்றுந்து வசதி பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் குறிப்பாக கிராமப்புற விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை எளிதாக நகரங்களுக்கு கொண்டுவரும் வசதி கிடைத்துள்ளது. மக்கள் நலனுக்காக அயராது உழைக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நாம் என்றும் உறுதுணையாக இருக்க வேண்டும்” என்று கூறினார்.
நிகழச்சியில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட துணைச் செயலாளர்கள் நாகராஜன், பிலால் உசேன், மார்கிரேட்மேரி, பொருளாளர் சத்தியமூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் நெடுஞ்செழியன், வெள்ளிமலை, மாநகர பகுதி செயலாளர்கள் ராஜேந்திரகுமார், ஜானகிராமன், அக்கு, சந்திரசேகர், ஆத்தூர் ஒன்றிய செயலாளர் பிள்ளையார்நத்தம் முருகேசன், திண்டுக்கல் மாமன்ற உறுப்பினர் நெல்லை சுபாஷ், மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் சுப்பையா, போக்குவரத்து கழக செயலாhளர் பொன் செந்தில், மாவட்ட விவசாய அணி அமை ப்பாளர் இல.கண் ணன், இலக்கிய அணி அமைப்பாளர் முருகானந்தம், பொது க்குழு உறுப்பினர் அக்பர், திண்டுக்கல் மாமன்ற உறுப்பினர் எல்லை சுபாஷ். திண்டுக்கல் மாநகர பொருளாளர் மீடியா சரவணன், பொன் முருகன் திண்டுக்கல் மாமன்ற உறுப்பினர்கள் அருள்வாணி ஜான் பீட்டர் உள்பட கட்சி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.