TN ASSEMBLY ELECTION VOTE COUNTING STARTED

Advertisment

தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில் பதிவான வாக்குகளையும், இடைத்தேர்தல் நடைபெற்ற கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகளையும் எண்ணும் பணி இன்று (02/05/2021) காலை 08.00 மணிக்குத் தொடங்கியது. தமிழகத்தில் மொத்தம் அமைக்கப்பட்டுள்ள 75 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்குகளும் பின்னர் வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகளும் எண்ணப்படுகின்றன.

வாக்கு எண்ணும் மையங்களில் காவல்துறையினர், துணை ராணுவப் படையினர் ஆகியோர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தைத் தொடர்ந்துஅசாம், மேற்கு வங்கம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டு வருகின்றன.

Advertisment

இதனிடையே, கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் நடத்தும் அலுவலர் தங்கவேலுவுக்கு கரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து, புதிய அதிகாரியாக கண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.