ADVERTISEMENT

'தேர்தல் பணிகளை இன்றே தொடங்குங்கள்' - அ.தி.மு.க தொண்டர்களுக்கு ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ் அழைப்பு!

11:23 AM Oct 16, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

நாளை (17/10/2020) வரவுள்ள அதிமுகவின் 49- ஆவது ஆண்டு தொடக்க விழாவையொட்டி, அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

அந்த கடிதத்தில், '2021- ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தல் வெற்றிப் பணிகளை இன்றே தொடங்குவோம். அ.தி.மு.க.வின் பொன்விழா ஆண்டில் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கும் மகத்தான சாதனையைப் படைப்போம். பொன்விழாவை நோக்கி புதுப்பயணம் தொடங்குவோம்; அ.தி.மு.க பொற்கால ஆட்சித் தொடர சூளுரைப்போம்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளை தி.மு.க ஏற்கனவே தொடங்கியுள்ள நிலையில், அ.தி.மு.க.வும் தற்போது தொடங்கியுள்ளதால், தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT