Skip to main content

அதிமுகவுக்கு கூட்டணி கட்சி தமாக வேண்டுகோள்!

Published on 22/03/2019 | Edited on 22/03/2019

தமிழகத்தின் நலன், நாட்டின் நலனுக்காகவே  அதிமுக கூட்டணியில் தமாகா இடம்பெற்றுள்ளது. இந்த கூட்டணியில் பாஜக இடம்பெற்று இருந்தாலும், அவர்களுக்கும் சிறுபான்மை மக்களுக்குமிடையே ஒருபாலமாக தமாகா விளங்கும். பாஜகவினர் சிறுபான்மையினருக்கு எதிராக செயல்பட்டால், அதனைத் தட்டிக்கேட்கவும் தமாகா தயங்காது." என்று இன்று ஈரோட்டில் நம்மிடம் பேசிய த.மா.க. பொதுச் செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான விடியல் சேகர் தொடர்ந்து பேசும் போது, 

 

vidiyal sekar

 

"காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்போம் என திமுக - காங்கிரஸ் கூட்டணி வாக்குறுதி கொடுத்துள்ளது. ஆனால், இவர்களது கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தபோதுதான், விவசாயிகளைப் பாதிக்கும் வகையில், டெல்டா மாவட்டத்தில் மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டம் கொண்டு வரப்பட்டது. விளை நிலங்களில் உயர்மின் கோபுரம் அமைக்கும் திட்டமும், திமுக - காங்கிரஸ் கூட்டணி அரசு இருந்தபோதுதான் கொண்டு வரப்பட்டது.

 

 

ஈரோடு மாவட்ட விவசாயிகள் பாதிப்படையும் வகையில் கெயில் குழாய் பதிப்பு திட்டத்தையும் திமுக - காங்கிரஸ் கூட்டணி அரசுதான் கொண்டு வந்தது. இத்திட்டத்தை எதிர்த்து போராடிய  ம.தி.மு.க. கணேசமூர்த்திதான், இப்போது தி.மு.க.  கூட்டணியின் ஈரோடு வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். ஈரோடு மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் மணிமாறன் வெற்றி பெற தமாகா முழு மூச்சுடன் பாடுபடும்.

 

தமிழகத்தில் கேபிள் டிவி இணைப்பு பெற்றுள்ளவர்களிடம் ரூ 100 முதல் ரூ 350 வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணத்தை சீரமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், ஏழை,எளிய மக்களுக்கு இலவச கேபிள் இணைப்பு வழங்கப்படும் என்ற வாக்குறுதியை அதிமுக வழங்க வேண்டும். , விவசாயிகளின் கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியையும் அளிக்க வேண்டுமென அதிமுகவை தொடர்ந்து வலியுறுத்துகிறோம்" என விடியல் சேகர் கூறினார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.