/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/K8993.jpg)
சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இன்று (04/10/2021) நடைபெற்ற நிகழ்ச்சியில் சுதந்திர போராட்டத் தியாகி கொடி காத்த திருப்பூர் குமரனின் பிறந்தநாளையொட்டி, ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு எதிரில் உள்ள சம்பத் நகர் பிரதான சாலைக்கு ‘தியாகி குமரன் சாலை, சம்பத் நகர்’ என்று பெயர் சூட்டி, பெயர் பலகையினை காணொளி காட்சி வழியாகத் திறந்துவைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், ஈரோடு மாவட்டத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு. முத்துசாமி, நாடாளுமன்ற உறுப்பினர் அந்தியூர் ப. செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈ.வெ.ரா., ஈரோடு மாவட்ட ஆட்சியர், ஈரோடு மாநகராட்சி ஆணையர், திருப்பூர் குமரனின் வாரிசுதாரர்கள் கலந்துகொண்டனர்.
தலைமைச் செயலகத்தில் இருந்து தலைமைச் செயலாளர், நகராட்சி நிர்வாக இயக்குநர் மற்றும் செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர், அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)