திருவாரூரில் மாவட்ட வளர்ச்சிப் பணிகள், கரோனா தடுப்பு பணிகள் குறித்து இன்று (28/08/2020) காலை 09.30 மணிக்கு முதல்வர் பழனிசாமி ஆய்வு செய்கிறார்.
அதைத் தொடர்ந்து 781 பயனாளிகளுக்கு ரூபாய் 5.52 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்க உள்ளார். முடிந்த ரூபாய் 11.50 கோடி திட்டங்களைத் தொடங்கி வைத்து ரூபாய் 22.60 கோடி திட்டங்களுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டுகிறார்.
தஞ்சையில் பிற்பகல் 02.45 மணி அளவில் கரோனா தடுப்பு பணிகள் மற்றும் மாவட்ட வளர்ச்சிப் பணிகள் பற்றி முதல்வர் ஆய்வு செய்கிறார். ரூபாய் 38.12 கோடி முடிந்த திட்டப்பணிகளைத் தொடங்கி வைத்து ரூபாய் 71.27 கோடி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.