Skip to main content

மனைவியை கத்தியால் குத்திய கணவன்...தானும் குத்திக்கொண்ட சம்பவம்!!

Published on 18/11/2019 | Edited on 18/11/2019

கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரில் மனைவியை கத்தியால் குத்தி தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் திருவாரூரில் பரபரப்பு ஏற்பட்டது. அங்கிருந்த போலீசார் இருவரையும் மீட்டு அரசு மருத்துவ கல்லூரியில் தீவிர சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
 

tiruvarur inicident


திருவாரூர் அருகே சேந்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர் வீரமணி (42), இவர் தங்கநகை செய்யும் தொழிலை செய்து வருகிறார். இவருக்கு பத்மாவதி (30) என்ற மனைவியும் ஆறு வயதில் பெண் குழந்தையும் உள்ளது. கடந்த 12ஆம் தேதி இருவருக்கும் இடையே  தகராறு  ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக பத்மாவதி திருச்சிக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் நேற்று கணவர் வீரமணி திருவாரூர் தாலுகா காவல் நிலையத்தில் மனைவி காணாமல் போய்விட்டதாகவும், அவரை கண்டுபிடித்து தருமாறும் புகார் அளித்துள்ளார். இதையறிந்த மனைவி பத்மாவதி வழக்கறிஞர் ராஜேந்திரன் என்பவருடன் தாலுகா காவல் நிலையத்திற்கு வந்துள்ளார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் பகுதியில் காரை நிறுத்திவிட்டு நின்றபோது அங்கே வந்த வீரமணிக்கும் அவரது மனைவிக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டது.
 

tiruvarur inicident


இதில் ஆத்திரமடைந்த வீரமணி, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மனைவி பத்மாவதியை சரமாரியாக குத்தியதில் படுகாயமடைந்தார். மனைவியை குத்தியதோடு இல்லாமல் தன்னைத் தானே கத்தியால் குத்திக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அருகே இருந்த காவல் நிலையத்திலிருந்த காவலர்கள், இருவரையும் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.