Skip to main content

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் படுகொலை; திருவாரூர் மாவட்டத்தில் பரபரப்பு!

Published on 10/11/2021 | Edited on 10/11/2021

 

tiruvarur district political leader incident


இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நீடாமங்கலம் ஒன்றிய செயலாளரும், திருவாரூர் மாவட்டக் குழு உறுப்பினருமான நடேச தமிழார்வன், எட்டு பேர் கொண்ட மர்மநபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை உண்டாக்கியிருக்கிறது.

 

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் ஒன்றியம் ஒளிமதி கிராமத்தைச் சேர்ந்தவர் நடேச தமிழார்வன். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்களில் ஒருவர் வழக்கறிஞராகவும் இருந்து பணியாற்றி வருகிறார். 30 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அடிப்படை உறுப்பினராக இருந்து வருகிறார். அடிப்படை உறுப்பினரில் துவங்கி படிப்படியாக வளர்ந்து இன்று நீடாமங்கலம் ஒன்றிய செயலாளராகவும், மாவட்டக்குழு உறுப்பினராகவும் உயர்ந்துள்ளார். 

 

விவசாயிகள், பொதுமக்கள் உள்ளிட்டோருக்கு எந்த பிரச்சனையானாலும் முதல் ஆளாக களத்தில் நின்று போராட்டம் நடத்துவது, மக்கள் பிரச்சனைகளை அரசு கவனத்திற்கு கொண்டு செல்லுவது இவருடைய வாடிக்கை.

 

சமீபத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை அதிகாரிகள் பார்வையிட வேண்டும், என விவசாயிகளோடு வயலில் நின்று போராட்டம் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு நீடாமங்கலம், கொரடாச்சேரி உள்ளிட்ட பகுதியில் கட்சியை வளர்த்த பெருமையும் இவருக்கு உண்டு.

 

இந்த சூழலில், நடேச தமிழார்வன் இன்று (10/11/2021) மாலை 05.00 மணியளவில் நீடாமங்கலத்தில் இருந்து தனது ஊருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரை பின்தொடர்ந்த 8 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டி படுகொலை செய்திருக்கின்றனர். இந்த சம்பவத்தால் நீடாமங்கலம் பகுதியே பதற்றமான சூழலுக்குச் சென்றிருக்கிறது. திருவாரூரில் இருந்து தஞ்சாவூர் செல்லும் சாலையும், கும்பகோணத்தில் இருந்து மன்னார்குடி, பட்டுக்கோட்டை செல்லும் சாலையும் முற்றிலுமாக அவரது ஆதரவாளர்களால் முடக்கப்பட்டு பேருந்துகள் நிறுத்தப்பட்டிருக்கிறது.

 

நடேச தமிழார்வனுக்கு ஏற்கனவே அந்த பகுதியில் உள்ள பிரபல ரவுடி ஒருவர் அடிக்கடி கொலை மிரட்டல் விடுவதாகவும், இடையூறு செய்ததாகவும் அவரது கட்சிக்காரர்களிடமும், போலீசாரிடமும் கூறியிருக்கிறார். அவர்கள் தான் இந்த கொலையை செய்திருக்க வேண்டும் என்கிறார்கள் கம்யூனிஸ்ட் கட்சியினர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

யோகா மாஸ்டர் அடித்து கொலை; விசாரணையில் பகீர்!

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
Transgressive yoga master beaten to ; Body recovery in a ruined well

கராத்தே மாஸ்டர் காணாமல் போன சம்பவத்தில், கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டது  சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியிலுள்ள கானத்தூர் ரெட்டி குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன். இவர் அந்த பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு கராத்தே மாஸ்டராகவும், யோகா மாஸ்டராகவும் பணியாற்றி வந்தார். இவரிடம் பல்வேறு குழந்தைகள் கராத்தே மற்றும் யோகா பயிற்சிகள் எடுத்து வந்த நிலையில் கராத்தே மாஸ்டர் லோகநாதனை கடந்த 13ஆம் தேதியிலிருந்து காணவில்லை என அவரது மகன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்ததோடு காணாமல்போன லோகநாதன் தேடி வந்தனர். லோகநாதன் வைத்திருந்த செல்போனில் அவருடன் இறுதியாக பேசியது யார் என்பது தொடர்பாக போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில் ஓஎம்ஆர் சாலையில் உள்ள நாவலூர் காரனை பகுதியைச் சேர்ந்த சுரேஷ் -கஸ்தூரி தம்பதியிடம் செல்போனில் பேசியது தெரியவந்தது.

சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு பேரையும் காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரித்த விசாரித்தபோது யோகா மாஸ்டர் லோகநாதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட பகீர் தகவல் வெளிவந்தது. செம்மஞ்சேரி பூங்காவில் வைத்து லோகநாதன் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கராத்தே, யோகா பயிற்சிகளை  கொடுத்து வந்த நிலையில் சுரேஷ்-கஸ்தூரி தம்பதியின் 11 வயது மகன் லோகநாதனிடம் பயிற்சிக்காக சேர்க்கப்பட்டு பயிற்சி எடுத்து வந்தான். அதே நேரம் கஸ்தூரியும் அவரிடம் யோகா பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார்.

Transgressive yoga master beaten to ; Body recovery in a ruined well

இந்நிலையில் கஸ்தூரியிடம் லோகநாதன் பாலியல் ரீதியாக தொல்லையில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் லோகநாதனின் பயிற்சி வகுப்புக்கு செல்வதை கஸ்தூரி தவிர்த்து வந்துள்ளார். ஆனால் இருப்பினும் மொபைல் மூலம் கஸ்தூரியை தொடர்பு கொண்ட லோகநாதன் யோகா வகுப்புக்கு வரும்படி தொடர்ந்து வற்புறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கஸ்தூரி இதுகுறித்து கணவரிடம் தெரிவிக்க இருவரும் சேர்ந்து கராத்தே மாஸ்டர் லோகநாதன் கொலை செய்ய திட்டமிட்டனர்.

அவரை மொபைல் மூலம் தொடர்புகொண்டு காரனை பகுதிக்கு வரவழைத்து அடித்து கொலை செய்ததோடு அங்குள்ள பாழடைந்த கிணற்றில் உடலை வீசிவிட்டுச் சென்றது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கிணற்றில் இருந்த லோகநாதனின் உடலை கயிறு மூலம் கட்டி வெளியே கொண்டு வந்தனர். யோகா மாஸ்டர் அடித்து கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு; 70 பேர் உயிரிழப்பு

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
 Indiscriminate shooting; 70 people lost their lives

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 70 பேர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு  பொறுப்பேற்றுள்ளது. உலக அளவில் பல்வேறு நாடுகளில் இருந்து இந்த தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள இசை நிகழ்ச்சி அரங்கில் எதிர்பாராதவிதமாக பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்த கும்பல் அங்கிருந்த மக்களை நோக்கி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டது. இந்த கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 70 பேர் உயிரிழந்துள்ளனர். 140க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதற்கு உலக தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், பிரதமர் மோடி எக்ஸ் சமூக வலைதளத்தின் வாயிலாக இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். 'இந்த துயரமான நேரத்தில் ரஷ்ய கூட்டமைப்பின் அரசாங்கத்திற்கு இந்திய அரசும், இந்திய மக்களும் துணை நிற்போம்' எனத் தெரிவித்துள்ளார்.