Skip to main content

திருவரங்குளம் ஒன்றிய சேர்மன் வாய்ப்பு யாருக்கு?

Published on 11/01/2020 | Edited on 11/01/2020

தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிந்து பலகட்ட போராட்டங்களுக்கு மத்தியில் தோ்தல் முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில் அனைத்து உள்ளாட்சிப் பிரதிநிதிகளும் 6 ந் தேதி பதவி ஏற்றுக் கொண்டனர். பதவி ஏற்ற நாளில் ஒன்றிய, மாவட்டக் கவுன்சிலர்களை கடத்தும் பணிகள் தீவிரமடைந்து உள்கட்சிகளுக்குள்ளேயே மோதல்கள் நடந்து முடிந்துள்ளது. ஜனவரி 11 ந் தேதி ஒன்றிய சேர்மன், மாவட்டச் சேர்மன் மறைமுகத் தேர்தல் நடக்க உள்ள நிலையில் லட்சங்களை கையில் வைத்துக் கொண்டு கவுன்சிலர்களை கடத்தி சொகுசு வாழ்க்கையில் தள்ளி உள்ளனர்.

 

Tiruvarankulam Union Chairman

 



புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிகமான இடங்களில் தி.மு.க கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றுள்ள நிலையிலும் காட்சிகள் மாறும் வாய்ப்புகளை உருவாக்கி உள்ளனர். இதற்காக இனப்பிரிவுகள் முன்னால் வந்து கொண்டிருக்கிறது. திருவரங்குளம் ஒன்றியத்தில் மொத்தம் உள்ள 25 வார்டுகளில் 17 வார்டுகளை தி.மு.க கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இதில் தி.மு.க சேர்மன் தான் அமர முடியும். ஆனால் தி.மு.க விற்குள்ளேயே யார் சேர்மன் என்ற யுத்தம் 6 ந் தேதியே தொடங்கி மேற்கு ஒ.செ தங்கமணி – கிழக்கு ஒ.செ ஞான.இளங்கோவன் தரப்பினர் மோதிக் கொண்டனர். இதில் கவுன்சிலர்கள் கடத்தல் சம்பவமும் நடந்து கட்சித் தலைமை வரை பஞ்சாயத்தும் சென்றுள்ளது.

 

Tiruvarankulam Union Chairman

 



இந்த நிலையில் தான் உடன்பிறப்புகள் கட்சித் தலைமைக்கு கடிதம் எழுதத் தொடங்கி உள்ளனர். அதில், திருவரங்குளம் ஒன்றியத்தில் 25 வார்டுகளில் கிழக்கு ஒன்றியத்தில் 13 வார்டுகளும், மேற்கு ஒன்றியத்தில் 12 வார்டுகளும் உள்ளது. இதில் அந்தந்த ஒன்றியச் செயலாளர்கள் பொறுப்பாளர்களாக இருந்து தேர்தல் பணி செய்தனர். வேட்பாளர் தேர்விலேயே மேற்கு ஒன்றியம் கூட்டணி தர்மத்தை மதிக்கவில்லை என்ற சி.பி.எம். மா.செ கவிவர்மன் கட்சி தலைமைக்கு புகார் அனுப்பி இருந்தார். அதாவது சி.பி.எம். க்கு வார்டு ஒதுக்கிவிட்டு அந்த இடத்தில் தி.மு.க பிரமுகருக்கு பணம் கொடுத்து சுயேட்சையாக நிற்க வைத்துள்ளார் என்பதே அந்த குற்றச்சாட்டு. இது ஒரு பக்கம் விசாரனை நடக்கிறது. மற்றொரு பக்கம் கிழக்கு ஒன்றியத்தில் உள்ள 13 வார்டுகளுக்கு பொறுப்பாளராக இருந்த ஞான.இளங்கோவன் 11 வார்டுகளில் கூட்டணிக்கட்சி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்துவிட்டார். ஆனால் மேற்கு ஒன்றியத்தில் 12 வார்டுகளில் 6 வார்டுகளை மட்டுமே தி.மு.க கூட்டணி கட்சியினரால் கைப்பற்ற முடிந்தது.

இந்த நிலையில் தான் அதிக வார்டுகளில் வெற்றியை பெற்றுள்ள எங்கள் ஒன்றியத்தில் சேர்மன் வேட்பாளர் வேண்டும் என்று கிழக்கு ஒ.செ கட்சி தலைமையிடம் கேட்டுள்ளார். அதுதான் சரி என்று கட்சி தலைமை முடிவெடுத்துள்ளது. இந்த நிலையில் தான் தி.மு.க விற்குள் குழப்பம் ஏற்படுத்த நினைத்த மணல் மாஃபியாக்கள் மேற்கு ஒன்றியத்தில் உள்ள தி.மு.க வினரை கிளப்பிவிட்டு சேர்மன் வாய்ப்பை கேட்டு குடைச்சல் கொடுத்து வருகின்றனர். இதனால் முடிவெடுக்க வேண்டிய மாவட்ட தி.மு.க நிர்வாகம் எதையும் செய்ய முடியாமல் தவித்து வருகிறார்கள். தற்போது கிழக்கு ஒன்றியத்திற்கு சேர்மன் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் எதிர் வர உள்ள சட்டமன்றத் தேர்தலில் மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளிலும் தி.மு.க வுக்கு எதிரான நிலை உருவாகும் என்று சொல்கிறார்கள். எப்படியோ தி.மு.க வில் குழப்பத்தை ஏற்படுத்தி தேர்தல் முடிவுகள் வரை ஒன்றாக இருந்த ஒ. செக்களை அடிதடி வரை இறக்கிவிட்டு பிரித்துவிட்ட சந்தோசத்தில் மணல் மாஃபியாக்க உள்ளனர். இதை கட்சி தலைமை, மாவட்டத் தலைமையும் கவணிக்காவிட்டால் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என குறிப்பிட்டுள்ளனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

“எதிரணி வேட்பாளர் போல் எங்கிருந்தோ வந்தவன் அல்ல நான்” - அ.தி.மு.க. வேட்பாளர் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
AIADMK candidate Karuppaiya campaign in Trichy

திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கருப்பையா திருவரங்கம்  ரெங்கநாதர் கோவில் ரெங்கா ரெங்கா கோபுரம் முன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி தனது பிரச்சாரத்தை நேற்று மாலை தொடங்கினார். இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்டச் செயலாளர் பரஞ்ஜோதி தலைமை தாங்கிப் பேசினார்.

அப்போது பரஞ்ஜோதி பேசுகையில், திருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் எடப்பாடியாரின் ஆசி பெற்ற அதிமுக வேட்பாளர் கருப்பையாவை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும். அவர் வெற்றி பெற்றால் திருச்சி பாராளுமன்ற தொகுதி மக்களின் குரலாக நிச்சயம் பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பார். மக்களின் வளர்ச்சி திட்டங்களுக்கு பாடுபடுவார் என்றார்.

திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப.குமார் பேசியபோது, ஸ்ரீரங்கம் மண் இங்கு இருப்பவர்கள் மட்டுமல்லாமல் உலகத்தில் இருப்பவர்கள் யார் இங்கு வந்தாலும் அவரை உயரே தூக்கி விடுகின்ற மண். எனவே நிச்சயம் கருப்பையாவையும் உயரே கொண்டு வரும். அவர் மக்கள் பணி சிறப்பாக செய்வார். திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அந்த வெற்றிடத்தை நிரப்புகின்ற தகுதி அதிமுகவிற்கு மட்டும்தான் உள்ளது என்பதை பொதுமக்கள் நிரூபிப்பார்கள். கருப்பையா திருச்சியிலிருந்து மக்கள் பணி ஆற்றுவார் என உறுதியளிக்கின்றோம் என்றார்.

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், திருச்சி நாடாளுமன்ற தொகுதி எதை எதிர்பார்க்கிறதோ எதை ஆழமாக வேண்டும் என்று நினைக்கின்றதோ நாடாளுமன்ற உறுப்பினர் எப்படி சிறப்பாக செயல்பட வேண்டும் என நம்புகிறார்களோ அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக உங்களுடைய உணர்வுகளுக்கு பாத்திரமாக உழைக்கக் கூடியவர் இளைஞர் கருப்பையா. உங்களை தாங்கியும் பிடிப்பார். உங்களுக்காக பாராளுமன்றத்தில் ஓங்கியும் குரல் கொடுப்பார் என்றார்.

ரெங்கா ரெங்கா கோபுரத்திற்கு முன்பாக வேட்பாளர் கருப்பையா பேசுகையில், எதிர் அணியில் நிற்கும் வேட்பாளரை போல் எங்கிருந்தோ வந்து தேவைக்காக ரெங்க நாதரையும் மக்களையும் சந்திக்கக் கூடியவர் நான் அல்ல. இந்த மண்ணின் மைந்தன் ஆகிய நான் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். மக்களின் உரிமைகளை நாடாளுமன்றத்தில் ஒலிக்க செய்ய வேண்டும் என்பதற்காகவே போட்டியிடுகிறேன் என்றார்.

பிரச்சாரத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்டச் செயலாளர்கள் குமார், பரஞ்சோதி, சீனிவாசன், அமைப்புச் செயலாளர்கள் ரத்தினவேல், மனோகரன், முன்னாள் அமைச்சர் வளர்மதி, சிறுபான்மை பிரிவு மாவட்டச் செயலாளர் புல்லட் ஜான், மீனவர் அணி பேரூர் கண்ணதாசன், இளைஞரணி மாவட்ட துணை செயலாளர் தேவா, ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் வி.என்.ஆர்.செல்வம், தமிழரசன், ஒன்றிய செயலாளர்கள் முத்துக்கருப்பன், ஜெயக்குமார், கோப்பு நடராஜ், பகுதி செயலாளர்கள் டைமன் திருப்பதி, சுந்தர்ராஜன், பொதுக்குழு உறுப்பினர் பிரியா சிவகுமார் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Next Story

கமல்ஹாசனை சந்தித்த டி.ஆர். பாலு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TR Balu met Kamal Haasan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரித்து தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் எனக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார் .

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். தற்போது ஸ்ரீபெரும்புதூர் திமுக நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவும், அமைச்சர் சேகர்பாபுவும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றனர். இந்த சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.