Skip to main content

ஊராட்சி மன்ற தலைவரை அடித்து உதைத்த சாராய வியாபாரிகள்! பஞ்சாயத்து பேசும் காவல்துறை அதிகாரிகள்!!!

Published on 10/05/2020 | Edited on 10/05/2020
President



திருவண்ணாமலை மாவட்டத்தில் தினமும் நூற்றுக்கணக்கான லிட்டர் சாராயம், சாராய ஊறல்களை பிடித்து வழக்கு பதிவு செய்து வருகிறது காவல்துறை. கடந்த 45 நாட்களில் மட்டும் 50 ஆயிரம் லிட்டர் அளவுக்கு சாராய ஊறல், சாராயத்தை கைப்பற்றி அழித்துள்ளது. 50க்கும் அதிகமானவர்களை கைது செய்துள்ளது. இப்படி சாராயத்துக்கு எதிராக காவல்துறையின் சிறப்பு படை போராடிவரும் நிலையில் காவல்துறை அதிகாரிகள் சிலர் மீது குற்றச்சாட்டு கிளம்பியுள்ளது.



திருவண்ணாமலை மாவட்டம், போளுர் அடுத்த விளாப்பாக்கம் கிராமத்தில் சாராயம் காய்ச்சுகிறார்கள் என்கிற தகவல் காவல்துறைக்கு சென்றுள்ளது. அதனை தொடர்ந்து போலிஸ் அதிகாரிகள் வந்து சாராயம் காய்ச்சுபவர்களை பிடித்து சென்றுள்ளனர். பின்னர் சிறிய அளவில் வழக்கு போட்டு அவர்களை விடுவித்துள்ளார்கள். அப்படி வந்தவர்கள் மீண்டும் சாராயம் விற்பனை செய்துள்ளார்கள். இதுப்பற்றி மீண்டும் காவல்துறை அதிகாரிகளுக்கு கிராமத்தில் இருந்தே தகவல் சென்றுள்ளது.

 

 


விளாப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் நாகராஜ். 33 வயது இளைஞரான நாகராஜ், போளுர் காவல்நிலையத்தில் ஒரு புகார் தந்துள்ளார். அதில், கடந்த மே 7ந் தேதி மதியம் என்னுடைய செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்ட விளாப்பாக்கத்தை சேர்ந்த குமார், நான் சாராயம் காய்ச்சுவதை ஏன் போலிஸாரிடம் சொன்னாய் என திட்டினார். அதோடு வீட்டுக்கு சென்ற என்னை குமார், ரமேஷ், வேலு, பாலாஜி, சிவக்குமார், சிலம்பரசன், செந்தில்குமார், முருகன் போன்றவர்கள் கட்டை, கத்தி போன்ற ஆயுதங்களோடு என்னை பிடித்து என் கன்னத்தில் அடித்தனர். அடிதாங்காமல் நான் அவர்களை பிடித்து தள்ளிவிட்டு வீட்டுக்குள் ஓடி பதுங்கினேன். அப்போதும் என்னை விடாமல் வீட்டுக்குள் வந்து அடித்தவர்கள் வீட்டுக்குள் இருந்த டிவி, எனது இருசக்கர வாகனம், கண்ணாடி போன்றவற்றை உடைத்து போட்டுவிட்டு சென்றனர் என புகார் தந்துள்ளார்.
 


புகார் குறித்து நாகராஜ்யிடம் நாம் பேசியபோது, நான் தந்த புகார் மீது இதுவரை காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சாராய விற்பனையாளர்கள், என்னை கொலை செய்துவிடுவேன் என மிரட்டினார்கள். எனது வீட்டில் வயதான பெற்றோர் மட்டுமே உள்ளனர். அவர்களை மிரட்டுவதாக வந்த தகவலை தொடர்ந்து நான் வீட்டுக்கு சென்றபோது, சாராய வியபாரிகள், அவரது உறவினர்கள் என 15 பேர் என் வீட்டு முன் சுத்தி நின்றனர். அவர்கள் எங்களை தாக்க உருட்டு கட்டை, கத்தி, கொடுவா போன்ற ஆயுதங்களுடன் நின்றனர். நானும் வீட்டில் இருந்த ஒரு கொடுவாவுடன் என் பெற்றோருக்கு பாதுகாப்பாகவும், என்னை பாதுகாத்துக்கொள்ளவும் நின்றேன்.



எங்களை தாக்க முயல்கிறார்கள் என காவல்துறைக்கு தகவல் சொன்னேன். ஒரு எஸ்.ஐ வந்தார். அவர் முன்னாடியே என்னை போட்டு அடித்தார்கள். நான் போய் புகார் தருகிறேன், சாராய கும்பலும் வந்து புகார் தருகிறது. புகாரை வாங்கி வைத்துக்கொண்டு போளுர் காவல்நிலையத்தில் பேசி தீர்த்துக்குங்கன்னு சொல்றாங்க. அதுக்கு காரணம் சாராயம் காய்ச்சுபவர்களின் உறவினர் பெண்மணி ஒருவர் அதே காவல்நிலையத்தில் பணியாற்றுகிறார். அவர் மூலமாக தான் சாராயம் காய்ச்சுபவர்கள் பற்றி நான் தகவல் சொன்னேன் என அவர்களிடம் சொல்ல என்னை தாக்கினார்கள்.


நான் இதுப்பற்றி போளுர் டி.எஸ்.பி குணசேகரன், எஸ்.பி சிபிசக்கரவர்த்தி போன்றவர்களிடம் நடந்ததை கூறியுள்ளேன். அதன்பின் இரண்டு தரப்பு மீதும் எப்.ஐ.ஆர் போட்டுள்ளார்கள். என் மச்சானை கைது செய்துள்ளார்கள், அந்த பக்கத்தில் ஒருவரை கைது செய்துள்ளார்கள் என்றார்.


காவல்துறைக்கு தகவல் சொல்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருவது இப்படிப்பட்ட செயல்களால் தான். ரகசிய தகவல் தரும் பொதுமக்களை, சமூக ஆர்வலர்களை சமூக விரோத சக்திகளிடம் காட்டி தருவதோடு, அவர்களின் உயிருக்கே ஆபத்து என வரும்போதும் ஈகோ பார்த்தும், லஞ்ச பணத்தை பார்த்து செயல்படும் காவல்துறை அதிகாரிகள் இருப்பதால் தான் காவல்துறை மீதான நம்பகத்தன்மை குறைந்தும், விமர்சனத்துக்கு ஆளாகியும் வருகிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘எது சனநாயகம்?’ - எழுத்தாளர் நா. அருணின் முதல் படைப்பு

Published on 12/02/2024 | Edited on 13/02/2024
'Etu Sananayakam?' is the first book of writer Na.Arun

‘பிரதமர் இளைய எழுத்தாளர்’ திட்டத்தின் கீழ் எழுத்தாளர் நா. அருண் எழுதிய எது சனநாயகம்? என்ற நாவல் நூலாக்கம் பெறத் தேர்வாகியுள்ளது. இந்தியக் கல்வி அமைச்சரகத்தின் கீழ் இயங்கும் தேசியப் புத்தக அறக்கட்டளை ரூ. 3 லட்சம் உரிமைத் தொகை வழங்கி, நூலை ஓராண்டிற்குள் 23 மொழிகளில் மொழிபெயர்த்து, அதனை இந்திய அரசின் மிக முக்கிய ஒருவரைக் கொண்டு வெளியிடவிருக்கிறது. 

இது தொடர்பாக எழுத்தாளர் நா. அருண், “என் நூலின் தலைப்பு ‘எது சனநாயகம்?’ இது தொடர்பாக இந்தியக் குடியரசுத் தலைவருடன் ஓர் உரையாடலுக்கு டெல்லியில் உள்ள ராஷ்ட்ரபதி பவனுக்கு அழைக்கப்பட்டேன். எழுத்தாளராகத் தமிழ் இலக்கிய உலகினில் என் முதல் படைப்பான ‘எது சனநாயகம்?’ என்ற நூலுடன் வெகு விரைவில் காலடி எடுத்து வைக்கவிருக்கிறேன்.

'Etu Sananayakam?' is the first book of writer Na.Arun

இத்தனை ஆண்டுகாலமாக என் பேச்சிலும் எழுத்திலும் எப்போதும் இருக்கும் சுயமரியாதையும் பேசாப் பொருளும் குரலற்றவர்களின் குரலும் இனிவரும் என் நூல்களிலும் இருக்குமென்பதனைத் தெரிவித்துக் கொள்கிறேன். இலக்கிய உலகில் யாருக்கும் அடிவருடிக் கொடுக்காமல், யார் காலிலும் விழாமல், யாரையும் ஆசானாக ஏற்காமல், சொந்தச் சரக்கை மட்டும் நம்பி சுய அறிவை மட்டும் துணையாக்கி எழுத வந்திருக்கிறேன். வரலாறு என்னை நினைவில் கொள்ளும் என்ற நம்பிக்கையுடன் உங்களுடன் இச்செய்தியைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Next Story

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை டிஸ்மிஸ் செய்ய கோரி ஐஆர்எஸ் அதிகாரி கடிதம்! 

Published on 02/01/2024 | Edited on 02/01/2024
IRS official letter demanding dismissal of Union Minister Nirmala Sitharaman

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ராமநாயக்கன்பாளையம் என்ற கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் கண்ணையன் மற்றும் கிருஷ்ணன் என்பவருக்கு கடந்த ஜூலையில் அமலாக்கத்துறை சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் உள்ள முகவரியில் சாதி பெயரை குறிப்பிட்டு சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஜூலை மாதம் 5 ஆம் தேதி ஆஜராக கூறி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த சம்மனில் ஆஜராவதற்கான காரணம் ஏதும் தெரிவிக்கப்படவில்லை என்றும் சொல்லப்படுகிறது. இருப்பினும் சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு தங்களது ஆதார், வங்கிக் கணக்கு புத்தகத்துடன் சென்று குறிப்பிட்ட தேதியில் ஆஜராகியுள்ளனர்.

இந்த சம்மன் தொடர்பாக சென்னை சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் கடந்த ஜூலை மாதம் 5 ஆம் தேதி ஆஜராக வந்த எழுதப் படிக்கத் தெரியாத பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த விவசாயிகள் இருவரும் மிரட்டி துன்புறுத்தப்பட்டதாக நுங்கம்பாக்கம் போலீசில் வழக்கறிஞர் பிரவீனா என்பவர் மூலம் புகார் அளித்திருந்தனர். இதனையடுத்து விவசாயிகளுக்கு சம்மன் அனுப்பியது தொடர்பாக அமலாக்கத்துறை மீது அளிக்கப்பட்ட புகாரின் மீது போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்த புகார் குறித்து வழக்கறிஞர் பிரவீனாவிடம் நுங்கம்பாக்கம் போலீசார் விசாரணையை நடத்தினர். அதேசமயம் விவசாயிகளின் 6.5 ஏக்கர் விவசாய நிலத்தை அபகரிக்கும் நோக்கில் சேலம் மாவட்ட பாஜக நிர்வாகி குணசேகரன் என்பவர் தொடர்ந்து பல்வேறு அச்சுறுத்தல்களையும், கொலை மிரட்டல்களையும் விடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்தே அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதே சமயம் சாதிப் பெயரை குறிப்பிட்டு சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறைக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

அதுமட்டுமின்றி சாதிப் பெயரை குறிப்பிட்டு சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், தங்களுக்கு பாதுகாப்பு வேண்டியும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கண்ணையன் மற்றும் கிருஷ்ணன் ஆகிய இருவரும் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளரை சந்தித்து  புகார் மனு அளித்துள்ளனர். எஸ்.பி. அலுவலகத்தில் கொடுத்த புகார் மனுவில் நிலத்தை அபகரிக்க முயன்ற விவகாரத்தில் பாஜக நிர்வாகி குணசேகரன் மீதும் நடவடிக்கை எடுக்க மனுவில் கோரிக்கை வைத்துள்ளனர்.

IRS official letter demanding dismissal of Union Minister Nirmala Sitharaman

இந்நிலையில் அமலாக்கத்துறை சார்பில் விவசாயிகளுக்கு சம்மன் அனுப்பியது தொடர்பாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு ஜிஎஸ்டி துணை ஆணையரும், ஐஆர்எஸ் அதிகாரியுமான பாலமுருகன் கடிதம் எழுதியுள்ளார். மேலும் அந்த கடிதத்தில், “சம்மன் அனுப்பப்பட்ட இரு விவசாயிகளின் வங்கிக் கணக்கில் 450 ரூபாய் மட்டுமே இருப்பு உள்ளது. இரு விவசாயிகளும் அரசு சார்பில் வழங்கப்படும் ஓய்வூதியம் ஆயிரம் ரூபாய் மற்றும் ரேஷனில் அத்தியாவசிய பொருட்கள் பெற்று வருகின்றனர். பாஜக பிரமுகருக்கும், சம்பந்தப்பட இரு விவசாயிகளுக்கும் இடையே நிலப்பிரச்சனை உள்ள நிலையில் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பபட்டுள்ளது. சாதியை குறிப்பிட்டு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதற்கு மத்திய நிதியமைச்சர் நேரடியாக பொறுப்பேற்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.